திருப்பூர்; சட்டமன்றத்தில் பேசினால் உன் வேலை போய்விடம் என்று நிகழ்ச்சியில் சொல்ல மறந்த பொறியாளரை திமுக எம்.எல்.ஏ திட்டிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி ரிங் ரோட்டில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனை கட்டும் பணியை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் பார்வையிட்டார். இதனையடுத்து, அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். இதில் திமுகவைச் சேர்ந்த தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனிடையே அமைச்சர் மற்றும் அதிகாரிகளை வரவேற்கும் நிகழ்வில் பேசிய பொறியாளர், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜின் பெயரை கூற மறந்துவிட்டார். இதனால், ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ.செல்வராஜ், என் பெயரை ஏன் சொல்லவில்லை, சட்டமன்றத்தில் பேசினால் உன் வேலை போய்விடும் என்று சொல்ல, பயந்து போன பொறியாளர் சாரி என்று கூறினார்.
ஆனால், அதனை ஏற்க மறுத்த திமுக எம்எல்ஏ செல்வராஜ், சாரியும் வேண்டாம், ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம் என்று சொல்ல, கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வெளியானது குபேரா தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா,…
சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா…
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
This website uses cookies.