சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை இன்றும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களாக வரத்து குறைவால் தக்காளியின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே சென்றது. இந்த விலை உயர்வு விற்பனையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், வாடிக்கையாளர்களுக்கு தலை சுற்றவே வைத்துள்ளது. விலை உயர்வை கருத்தில் கொண்டு ரேஷன் கடைகளில் தக்காளியை விற்பனைக்கு கொண்டு வந்தது தமிழக அரசு.
வரத்து குறைவால் விலை உயர்ந்த தக்காளியின் விலை, நேற்று வரத்து அதிகரிப்பினால் 30 ரூபாய் குறைந்து காணப்பட்டது. இதனால், ஒரு கிலோ தக்காளி 80 முதல் 90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு வாரத்திற்கு பின் தக்காளி விலை கனிசமாக குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில், இன்று மீண்டும் தக்காளி விலை உயர்ந்திருப்பது வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்பேடு சந்தையில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.90க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் ரூ.30 அதிகரித்து ஒரு கிலோ தக்காளி ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று குறைந்து காணப்பட்டு வந்த தக்காளி விலை, இன்று ஒரே நாளில் மீண்டும் விலை உயர்ந்துள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
படுதோல்வியடைந்த சிக்கந்தர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம்…
மாறன் குடும்பத்தில் ஏற்பட்ட புகைச்சல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சன் டிவி பங்கு தொடர்பாக கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன்…
வெளியானது குபேரா தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா,…
சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா…
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
This website uses cookies.