அமைச்சர் உதயநிதி வீட்டின் முன் திரண்ட வியாபாரிகள் : போலீசார் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம்!!
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் வீடு, சென்னை பசுமைவழிசாலையில் உள்ளது. இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடைகளை அமைக்க கூடிய வியாபாரிகள் திரண்டு வந்து அமைச்சரை சந்திக்க வந்தனர்.
இதுகுறித்து வியாபாரிகள் தற்காலிக பட்டாசு கடை அமைக்க அனுமதி கேட்டு, தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளோம்.
ஆனால், இதுவரை தீயணைப்புத்துறை அனுமதி வழங்கவில்லை. இதனால், காவல்துறையிடம் முறையிட முடியாத நிலையில் இருக்கிறோம்.
தீயணைப்புத்துறை அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்திய போது, எங்களுக்கு அரசு சார்பில் அனுமதி வழங்குவதற்கான எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று தெரிவித்தாக கூறியுள்ளனர்.
பட்டாசு வியாபாரத்துக்காக பல கோடி ரூபாயில் பட்டாசுகளை கொள்முதல் செய்து வைத்துள்ளோம். எனவே எங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதால், தங்களுக்கு தற்காலிக கடைகளை அமைக்க அனுமதி வழங்க வலியுறுத்துமாறு அமைச்சர் உதயநிதியை சந்திக்க வந்தனர். ஆனால், போலீசார் தடுத்தி நிறுத்தி விட்டனர். ஆனால், காவல்துறையினரிடம் சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.