ஏர்கன் துப்பாக்கியை வைத்து செல்பி எடுத்த போது விபரீதம் : 17 வயது சிறுவன் சுட்டதால் 4 வயது சிறுமி பலியான பரிதாபம்!!

தெலங்கானா : ரங்கா ரெட்டி மாவட்டத்தில் 17 வயது சிறுவன் நடத்திய ஏர்கன் துப்பாக்கி சூட்டில் 4 வயது சிறுமி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் சங்கா ரெட்டி மாவட்டத்தில் வாவிலாலா கிராமத்தில் பிரசாத் என்பவருக்கு பார்ம் ஹவுஸ் உள்ளது. அங்கு அதிக அளவில் குரங்குகள் வருவதால் அவற்றை விரட்ட பிரசாத் ஆன்லைன் மூலம் ஏர்கன் துப்பாக்கியை வாங்கி பயன்படுத்தி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன் தன்னுடைய பார்ம்ஹவுசை சுற்றி மின்வேலி அமைத்தார் பிரசாத். எனவே அங்கு குரங்குகள் நடமாட்டம் குறைந்தது.

எனவே ஏர்கன் துப்பாக்கியை தனது தோட்டத்தில் காவலாளியாக பணிபுரியும் நாகராஜ் தங்கியுள்ள வீட்டில் வைறத்திருந்தார் பிரசாத். நேற்று முன்தினம் காவலாளி நாகராஜன் வீட்டிற்கு உறவினர்கள் வந்தனர்.

நேற்று வேலு என்ற அவருடைய உறவினர் வீட்டு 17 வயது சிறுவன் மற்றும் நண்பர்கள் வேலுவின் வீட்டிலிருந்த ஏர்கன் துப்பாக்கியை கையில் வைத்து கொண்டு பல்வேறு கோணங்களில் செல்பி (புகைப்படம்) எடுத்து கொண்டனர்.

பின்னர் அதனை இயக்கி பார்த்தபோது எதிர்பாராதவிதமாக குண்டு வெளியேறி எதிரே வந்து கொண்டிருந்த ஜான்வி என்ற 4 வயது சிறுமியின் தலையில் பாய்ந்தது.

அதனால் பலத்த காயமடைந்த அந்த சிறுமி அந்த இடத்திலேயே மயங்கி விழுந்து மரணம் அடைந்தார். சப்தம் கேட்டு ஓடிவந்த நாகராஜ் உடனடியாக அந்த சிறுமியை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தூக்கி சென்றார்.

சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கு இருந்த ஏர்கன் துப்பாக்கியை கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.


மேலும் தோட்ட உரிமையாளர் பிரசாத், துப்பாக்கியால் சுட்ட சிறுவன் வேலு ஆகிய இரண்டு பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுவன் விளையாட்டாக சுட்டு விளையாடிய சம்பவத்தில் சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

11 hours ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

12 hours ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

12 hours ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

12 hours ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

13 hours ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

14 hours ago

This website uses cookies.