தெலங்கானா : ரங்கா ரெட்டி மாவட்டத்தில் 17 வயது சிறுவன் நடத்திய ஏர்கன் துப்பாக்கி சூட்டில் 4 வயது சிறுமி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் சங்கா ரெட்டி மாவட்டத்தில் வாவிலாலா கிராமத்தில் பிரசாத் என்பவருக்கு பார்ம் ஹவுஸ் உள்ளது. அங்கு அதிக அளவில் குரங்குகள் வருவதால் அவற்றை விரட்ட பிரசாத் ஆன்லைன் மூலம் ஏர்கன் துப்பாக்கியை வாங்கி பயன்படுத்தி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன் தன்னுடைய பார்ம்ஹவுசை சுற்றி மின்வேலி அமைத்தார் பிரசாத். எனவே அங்கு குரங்குகள் நடமாட்டம் குறைந்தது.
எனவே ஏர்கன் துப்பாக்கியை தனது தோட்டத்தில் காவலாளியாக பணிபுரியும் நாகராஜ் தங்கியுள்ள வீட்டில் வைறத்திருந்தார் பிரசாத். நேற்று முன்தினம் காவலாளி நாகராஜன் வீட்டிற்கு உறவினர்கள் வந்தனர்.
நேற்று வேலு என்ற அவருடைய உறவினர் வீட்டு 17 வயது சிறுவன் மற்றும் நண்பர்கள் வேலுவின் வீட்டிலிருந்த ஏர்கன் துப்பாக்கியை கையில் வைத்து கொண்டு பல்வேறு கோணங்களில் செல்பி (புகைப்படம்) எடுத்து கொண்டனர்.
பின்னர் அதனை இயக்கி பார்த்தபோது எதிர்பாராதவிதமாக குண்டு வெளியேறி எதிரே வந்து கொண்டிருந்த ஜான்வி என்ற 4 வயது சிறுமியின் தலையில் பாய்ந்தது.
அதனால் பலத்த காயமடைந்த அந்த சிறுமி அந்த இடத்திலேயே மயங்கி விழுந்து மரணம் அடைந்தார். சப்தம் கேட்டு ஓடிவந்த நாகராஜ் உடனடியாக அந்த சிறுமியை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தூக்கி சென்றார்.
சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கு இருந்த ஏர்கன் துப்பாக்கியை கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.
மேலும் தோட்ட உரிமையாளர் பிரசாத், துப்பாக்கியால் சுட்ட சிறுவன் வேலு ஆகிய இரண்டு பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுவன் விளையாட்டாக சுட்டு விளையாடிய சம்பவத்தில் சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.