தமிழக பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை வெளியிட்ட புகார் பட்டியலில் குறிப்பிடப்பட்ட, மூத்த திட்ட அதிகாரி உள்ளிட்ட எட்டு அதிகாரிகளை இடமாற்றம் செய்து, சி.எம்.டி.ஏ., உத்தரவிட்டுள்ளது.
குறிப்பிட்ட ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சாதகமாக, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., செயல்படுகிறது என, தமிழக பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை, கடந்த ஜூனில் புகார் தெரிவித்தார்.
அதில், சி.எம்.டி.ஏ., வில் மூத்த திட்ட அதிகாரியாக உள்ள ருத்ரமூர்த்தி உள்ளிட்ட சிலரின் பெயரை, அண்ணாமலை குறிப்பிட்டு இருந்தார். அப்போது, ‘அண்ணாமலை தெரிவித்த புகார்களில் ஆதாரம் இல்லை’ என, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி மறுப்பு தெரிவித்தார்.
இந்நிலையில், அண்ணாமலை புகாரில் சுட்டிக்காட்டப்பட்ட, மூத்த திட்ட அலுவலர் ருத்ரமூர்த்தி உள்ளிட்ட எட்டு அதிகாரிகள், வெவ்வேறு பிரிவுகளுக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.
நான்கு மூத்த திட்ட அலுவலர்கள், இரண்டு துணை திட்ட அலுவலர்கள், இரண்டு உதவி திட்ட அலுவலர்கள் என, எட்டுபேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். சென்னை நந்தம்பாக்கத்தில், குறிப்பிட்ட ஒரு நிறுவனத்துக்காக, நில வகைபாடு மாற்றத்தில், அதிகாரிகளுக்குள் எழுந்த பிரச்னையும், இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.