திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி பூசலால் இன்று காங்கிரஸ் கட்சியை அலுவலகத்தை காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளே பூட்டு போட்டு பூட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சிச்சியை சேர்ந்த உறுப்பினர்கள் கூறுகையில் திமுகவுடன் கூட்டணி வைத்து 10 வார்டுகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்காமல், தற்போது திமுக ஒதுக்கியுள்ள நான்கு அல்லது ஐந்து இடங்களில் மட்டும் காங்கிரஸ் போட்டியிட தயாராகி உள்ளது. அதிலும் கடந்த 2011-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்ட போது, பல லட்சம் ரூபாய் செலவு செய்து காத்துக் கிடந்த நிலையில், இன்று கட்சியில் உள்ள தலைவர்கள் மட்டும் திமுக அருகே உள்ள வார்டுகளில் போட்டியிடுவது கண்டிக்கத்தக்க செயல் என்றும் தெரிவிக்கின்றனர்.
மேலும், தேர்தல் பணி மற்றும் கூட்டணி தொடர்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் பேச்சுவார்த்தை குறித்து எந்த தகவலும் தெரிவிக்காமல் இருக்கும் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜவஹர், அலுவலகத்திற்கு வராமல் இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. திமுகவினர் நாங்கள் வெளியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கு ஆதரவு தருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
எனவே, தற்போது திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள இந்த கூச்சல் குழப்பத்தால் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் அலுவலகத்தை பூட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து மேலும் அங்கு சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்று மாலை போட்டியிடும் வார்டு எண்ணிக்கை தொடர்பாக தலைமை ஒன்றுகூடி பேசி முடிவு செய்ய உள்ளனர். இன்று இரவுக்குள் திமுக தருகின்ற 5 வார்டுகளில் காங்கிரஸார் போட்டியிட போகிறார்களா அல்லது திருச்சியில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதா என்பது தெரியவரும்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.