திருச்சி : திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சியில் ஒதுக்கப்பட்ட இரு வார்டுகளில், கணவன் மற்றும் மனைவியே போட்டியிடுவது கட்சி தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பிப்.,19ம் தேதி நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக, திமுக கூட்டணி, பாஜக, பாமக என பல்முனை போட்டி நிலவுகிறது. இடப்பங்கீட்டை முடித்து அனைத்து கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் 2 வார்டுகள் இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த 2 வார்டுகளிலும் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி மற்றும் அவரின் மனைவி வேட்பாளராக களம் இறக்கப்பட்டிருப்பது அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
19வது வார்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர நிர்வாக குழு உறுப்பினர் தங்கமணியும், 19வது வார்பில் அவரது மனைவியும், மாதர் சங்கம் மணப்பாறை நகரத் தலைவியுமான மனோன்மணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 2 இடங்களிலும் கணவன், மனைவியை வேட்பாளர்களாக களம் இறக்கியிருப்பது அனைவரின் கவனத்தை பெற்றாலும், கடும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.