திருச்சி : திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சியில் ஒதுக்கப்பட்ட இரு வார்டுகளில், கணவன் மற்றும் மனைவியே போட்டியிடுவது கட்சி தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பிப்.,19ம் தேதி நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக, திமுக கூட்டணி, பாஜக, பாமக என பல்முனை போட்டி நிலவுகிறது. இடப்பங்கீட்டை முடித்து அனைத்து கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் 2 வார்டுகள் இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த 2 வார்டுகளிலும் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி மற்றும் அவரின் மனைவி வேட்பாளராக களம் இறக்கப்பட்டிருப்பது அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
19வது வார்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர நிர்வாக குழு உறுப்பினர் தங்கமணியும், 19வது வார்பில் அவரது மனைவியும், மாதர் சங்கம் மணப்பாறை நகரத் தலைவியுமான மனோன்மணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 2 இடங்களிலும் கணவன், மனைவியை வேட்பாளர்களாக களம் இறக்கியிருப்பது அனைவரின் கவனத்தை பெற்றாலும், கடும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.