காயத்ரி ரகுராம் திமுகவில் இணைய இருப்பதாக வெளியான தகவல் குறித்து திருச்சி சூர்யா சிவா வெளியிட்ட தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி காயத்ரி ரகுராம் பாஜக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர், கட்சியில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டார். அதுமுதல் அடுத்தடுத்து அண்ணாமலையை சீண்டி கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அவரது கருத்துக்கு பாஜகவினரும் கடுமையாக பதிலடி கொடுத்து வருகின்றனர்.
அண்மையில் பாஜகவும், அக்கட்சியின் தலைவர் அண்ணாமலையையும் எதிர்த்தும், பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் எனக் கோரியும் நடைபயணத்தை காயத்ரி ரகுராம் அறிவித்திருந்தார். இந்த நிலையில், சில காரணங்களுக்காக அந்த நடைபயணத்தை ஒத்திவைப்பதாகவும் திடீரென அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இது குறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “ஊழலுக்கு எதிரான யாத்திரைக்கு சொந்த பணத்தை செலவிட மாட்ட ஆனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு மாவட்ட தலைவர்களும் 15 முதல் 25 லட்சம் வரை வசூல் செய்ய உத்தரவிட்டீர்கள் ஆனால் டெல்லியிலிருந்தும் தனியாக வசூல் செய்கிறீர்கள். இது ஊழலுக்கு எதிரான யாத்திரை போல் தெரியவில்லை.. அலிபாபா 48 திருடர்கள் சொந்தக் கட்சி தொடங்குவது போல் தெரிகிறது,” என விமர்சித்திருந்தார்.
இதனிடையே, அவரது நடைபயணத்திற்கு போதிய ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்காததால் தான் அவர் இந்த முடிவை எடுத்ததாக கருத்துக்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், காயத்ரி ரகுராமின் செயலை விமர்சித்து மீண்டும் திருச்சி சூர்யா சிவா பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று யாத்திரை நடத்துறேன்னு சொல்லிட்டு ஊர் ஊரா ஓசியில் ரூம் போட்டு கொடுங்கள் என்று கேட்டியாமே யாரும் போட முடியாதுன்னு சொன்னதுனால தான் நடை பயணத்தை தள்ளி வச்சிட்டியாமே ரூம்கே வழியில்ல இதுல போற இடம் எல்லாம் பாட்டில் வேற கேக்குறியாமே,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், திமுகவில் காயத்ரி ரகுராம் இணைய இருந்ததாகவும், ஆனால், உதயநிதி ஸ்டாலின் தலையிட்டு அவரை கட்சியில் இணைக்க வேண்டாம் என்று கூறியதாகவும் திருச்சி சூர்யா மற்றொரு பதிவில் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.