தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மாவை அவமத்து பேசியதாக புதிய கிரிமினல் சட்டத்தின்கீழ் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸில் போலே பாபா சாமியாரின் இந்து மத ஆன்மீக சொற்பொழிவின்போது நடந்த கூட்டநெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர்.
இதில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர். இந்த விபத்து நாட்டையே உலுக்கிய நிலையில்,பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தை அரசியல் தலைவர்கள் சென்று சந்தித்த வண்ணம் உள்ளனர்.
அந்த வகையில் தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா அவர்களை சென்று சந்திக்கும்போது அவருக்கு பணியாள் ஒருவர் குடைபிடித்தபடி செல்லும் வீடியோ இணையத்தில் பேசுபொருளானது.
அவருக்கு [ரேகா சர்மாவுக்கு] ஏன் மற்றொருவர் குடைபிடிக்கிறார் என்று நெட்டிசன் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு தனது எக்ஸ் தளத்தில் மஹுவா மொய்த்ரா, அவர் [ரேகா சர்மா] தனது முதலாளியின் பைஜாமாவை தூக்கிப் பிடிப்பதில் பிசியாக உள்ளார் என்று பதிலளித்திருந்தார்.
பின் அந்த பதிவை நீக்கினார். இந்த பதிவுக்கு ரேகா சர்மா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் மஹுவா மீது மகளிர் ஆணையம் சார்பில் டெல்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டது, எனவே தற்போது மஹுவா மொய்த்ரா மீது எப்.ஐ.ஆர் பதியப்பட்டுள்ளது.
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
This website uses cookies.