சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலினை அமைச்சரவையில் சேர்க்குமாறு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்திருந்தார்.
அதற்கு ஆளுநர் நேற்றைய தினம் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து ராஜ்பவனில் உள்ள தர்பார் ஹாலில் வரும் 14ஆம் தேதி காலை 9.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.
இந்த சூழலில் உதயநிதிக்கு எந்த துறை வழங்கப்பட போகிறது என்பது விவாதப் பொருளாக மாறியுள்ளது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்பு திட்ட அமலாக்கம் ஆகிய இரண்டு துறைகள் ஒப்படைக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் அமைச்சர் மெய்யநாதன் அவர்கள் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை உடன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையும் கவனித்து வருகிறார். சிறப்பு திட்ட அமலாக்கத்துறை முதல்வர் மு.க.ஸ்டாலின் வசமுள்ளது.
இவை இரண்டும் தான் உதயநிதி ஸ்டாலின் வசமாகப் போகிறது என்று கூறப்படுகிறது. உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுப்பதன் மூலம் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் எண்ணிக்கை 35ஆக மாறவுள்ளது.
இந்திய அரசியலமைப்பின் 91வது சட்டத் திருத்தம் 2003ன் படி மத்திய, மாநில அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை மொத்தமுள்ள மக்களவை அல்லது மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15 சதவீதத்தை தாண்டக் கூடாது என்ற உச்ச வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதுவே கடைசியாகும். இதற்கு மேல் அமைச்சர்களின் எண்ணிக்கையை கூட்ட முடியாது. வேண்டுமெனில் அமைச்சரவையில் மாற்றம் மட்டுமே செய்யலாம். விரிவாக்கம் செய்ய முடியாது.
இந்நிலையில் தலைமை செயலகத்தின் முதன்மை கட்டிடத்தில் இரண்டாவது தளத்தில் தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் அறைக்கு அருகில் உதயநிதி ஸ்டாலினுக்கான அமைச்சர் அறை தயாராகி வருகிறது.
திமுகவில் கருணாநிதி, ஸ்டாலினுக்கு கிடைக்காத பெருமை உதயநிதிக்கு கிடைக்கப் போகிறது. அதாவது, முதல்முறை எம்.எல்.ஏவாக பதவியேற்று 10 ஆண்டுகள் கழித்து தான் கருணாநிதி அமைச்சர் ஆனார்.
இதேபோல் ஸ்டாலின் அமைச்சராக 17 ஆண்டுகள் ஆனது. இவர்களை ஓவர்டேக் செய்து சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவான 19 மாதங்களில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகிறார்.
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
This website uses cookies.