சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலினை அமைச்சரவையில் சேர்க்குமாறு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்திருந்தார்.
அதற்கு ஆளுநர் நேற்றைய தினம் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து ராஜ்பவனில் உள்ள தர்பார் ஹாலில் வரும் 14ஆம் தேதி காலை 9.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.
இந்த சூழலில் உதயநிதிக்கு எந்த துறை வழங்கப்பட போகிறது என்பது விவாதப் பொருளாக மாறியுள்ளது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்பு திட்ட அமலாக்கம் ஆகிய இரண்டு துறைகள் ஒப்படைக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் அமைச்சர் மெய்யநாதன் அவர்கள் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை உடன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையும் கவனித்து வருகிறார். சிறப்பு திட்ட அமலாக்கத்துறை முதல்வர் மு.க.ஸ்டாலின் வசமுள்ளது.
இவை இரண்டும் தான் உதயநிதி ஸ்டாலின் வசமாகப் போகிறது என்று கூறப்படுகிறது. உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுப்பதன் மூலம் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் எண்ணிக்கை 35ஆக மாறவுள்ளது.
இந்திய அரசியலமைப்பின் 91வது சட்டத் திருத்தம் 2003ன் படி மத்திய, மாநில அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை மொத்தமுள்ள மக்களவை அல்லது மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15 சதவீதத்தை தாண்டக் கூடாது என்ற உச்ச வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதுவே கடைசியாகும். இதற்கு மேல் அமைச்சர்களின் எண்ணிக்கையை கூட்ட முடியாது. வேண்டுமெனில் அமைச்சரவையில் மாற்றம் மட்டுமே செய்யலாம். விரிவாக்கம் செய்ய முடியாது.
இந்நிலையில் தலைமை செயலகத்தின் முதன்மை கட்டிடத்தில் இரண்டாவது தளத்தில் தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் அறைக்கு அருகில் உதயநிதி ஸ்டாலினுக்கான அமைச்சர் அறை தயாராகி வருகிறது.
திமுகவில் கருணாநிதி, ஸ்டாலினுக்கு கிடைக்காத பெருமை உதயநிதிக்கு கிடைக்கப் போகிறது. அதாவது, முதல்முறை எம்.எல்.ஏவாக பதவியேற்று 10 ஆண்டுகள் கழித்து தான் கருணாநிதி அமைச்சர் ஆனார்.
இதேபோல் ஸ்டாலின் அமைச்சராக 17 ஆண்டுகள் ஆனது. இவர்களை ஓவர்டேக் செய்து சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவான 19 மாதங்களில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகிறார்.
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு…
16 வயது சிறுவனுடன் 12 முறை உடலுறவு வைத்த டீச்சர் மீது 64 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம்…
கிளாசிக் ஜோடி கமல்ஹாசன்-ஸ்ரீதேவி ஜோடியை 80களின் காலகட்டத்தில் பலரும் கொண்டாடியது போல் ரஜினி-ஸ்ரீதேவி ஜோடியையும் பலரும் கொண்டாடினர். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால்…
மனைவியை கொலை செய்ய மது கொடுத்து கை, கால்களை கட்டி உல்லாசமாக இருந்துவிட்டு கழுத்தை நெறித்து கொன்ற ஜிம் மாஸ்டரின்…
வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…
This website uses cookies.