உத்தரகாண்டில் ரைடோலி அருகே ரிஷிகேஷ்-பத்ரிநாத் நெடுஞ்சாலையில் 23-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வேன் சென்று கொண்டு இருந்த நிலையில், கட்டுப்பாட்டை இழந்து அலக்நந்தா ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர் மற்றும் 14 பேர் காயமடைந்தனர் என்று மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) வட்டாரம் தகவலை தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அஞ்சப்படுகிறது.
மேலும் இந்த விபத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்தவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாகனத்தில் பயணித்தவர்களில் பெரும்பாலானோர் டெல்லியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது.
இந்த விபத்து குறித்து (SDRF) அதிகாரிகள் கூறும் போது “வேன் காஜியாபாத்திலிருந்து சோப்தாவுக்குச் சென்று கொண்டிருந்ததாகவும், இரவு 11.30 மணியளவில் விபத்து நடந்ததாகவும் கூறினார்.
முதற்கட்டமாக, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் விபத்துக்குள்ளானதாகவும்” தெரிவித்துள்ளார். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து விபத்து எப்படி நடந்தது என்பது பற்றி விசாரணை நடத்த உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.