தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி வட்டம் மெணசி கிராம நிர்வாக அதிகாரியாக இருப்பவர் இளங்கோ. இளம் வயதுடைய இவர் துணிச்சலானவர்.
இவர் அரூர் அருகே உள்ள எட்டிப்பட்டி அழகிரி நகர் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர். இவர் நேற்று இரவு 01-05-2023 அன்று இரவு மெனசி பகுதியில் கனிம வள கொள்ளை திருடப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அந்த நேரத்திலும் தனது கடமையை நேர்மையுடன் செயல்படுத்த
மழை பெய்து கொண்டிருந்த போதும் கனிவள கொள்ளை கும்பலை கையும் களவுமாக பிடிப்பதற்காக சம்பவ இடத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் விரைந்தார் .
அப்போது குண்டலமடுவு காளியம்மன் கோவில் அருகே உளி கற்களை ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று அதிவேகமாக சென்றது. அவற்றை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க கிராம நிர்வாக அதிகாரி முயற்சித்துள்ளார்.
அப்போது அந்த டிராக்டர் நிற்காமல் இவர் மீது ஏற்றிக் கொல்லும் வகையில் வேகமாகச் சென்றது. அதிர்ச்சியடைந்த இவர் அதிர்ஷ்டவசமாக வாகனத்தில் சிக்காமல் ஓடி தப்பித்துள்ளார்.
இதனால் பெரும் அதிர்ச்சியும் பயமும் கொண்ட கிராம நிர்வாக அதிகாரி இந்த வாகனம் யாருடையது என்பது குறித்து ஆய்வு செய்ததில் மெணசி பகுதியை சார்ந்த ராகவன் என்றும் டிராக்டர் எண் TN 29 டி TZ 2538 எனவும் தெரியவந்துள்ளது.
இந்த நபர் சொந்தமாக ஜேசிபி இயந்திரம் கொண்டு கனிம வள கொள்ளைகளை திருடி தனது டிராக்டர் மூலமாக விற்பனை செய்து வந்ததும் கிராம நிர்வாக அதிகாரியின் கவனத்திற்கு வந்துள்ளது.
இந்த கும்பலுக்கு அப்பகுதியை சேர்ந்த முக்கிய நபர்கள் உதவியாக இருப்பதாகவும்,இந்த கும்பலிடம் இருந்து தற்போது கிராம நிர்வாக அதிகாரிக்கு மிரட்டல்கள் வர துவங்கியுள்ளது.
இதுகுறித்து தனது உயர் அதிகாரிகளான மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியருக்கு புகார் தெரிவித்துள்ளதாகவும், இச்சம்பவம் குறித்து
காவல் துறையில் உரிய ஆவணங்களுடன் புகார் தெரிவிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
நேர்மையாக திறமையாகவும் கனிம வள கொள்ளைக்கு இடையூறாக செயல்படும் கிராம நிர்வாக அதிகாரிகளை தேடி பிடித்து கனிம வள கொள்ளை கும்பல் கொலை செய்ய முயற்சிக்கும் சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தை அடுத்து கனிம வளம் அதிகம் உள்ள தருமபுரி மாவட்டத்திலும் கொலை முயற்சிகள் அரங்கேறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
This website uses cookies.