கதையல்ல நிஜம்; வயநாடு நிலச்சரிவு ஓராண்டு முன்பே கதையாய் எழுதிய மாணவி: மனம் தொட்ட நிகழ்வு…!!

கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. பலநூறு குடும்பங்களை சேர்ந்தவர்கள் மண்ணில் புதைந்து போயினர். மேப்பாடி அருகே மலைப்பகுதிகளில் அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால், மலப்புரம், நீலம்பூர் பகுதிக்குப் பாயும் சாலியாறு ஆற்றில் பலர் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 350-ஐ கடந்துள்ளது.மேலும் பலர் மண்ணில் புதைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்புப்பணிகளில் இராணுவமும் பொது மக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வயநாட்டைச் சேர்ந்த சிறுமி கடந்தாண்டு எழுதிய சிறுகதை ஒன்றில் வரும் இயற்கை பேரிடர் அப்படியே நிகழ்ந்துள்ள சம்பவம் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

வயநாட்டில் சூரல்மலை பகுதியில் உள்ள வெலர்மலா அரசு மேல்நிலைப்பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் லயா என்ற சிறுமி கடந்தாண்டு பள்ளி இதழுக்காக சிறுகதை ஒன்றை எழுதியுள்ளார். அதில் நீர்வீழ்ச்சி ஒன்றில் மூழ்கிய சிறுமி ஒருவர் பறவையாக திரும்பி வந்து, நீர் நிலைகளுக்கு அருகில் சென்றால் ஏற்படும் ஆபத்து குறித்து தன் கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறார்.அதன் மூலம் 2 குழந்தைகள் காப்பாற்றப் படுகிறார்கள்.

தனக்கு நேர்ந்த சோக முடிவு மற்ற எந்த குழந்தைகளுக்கும் நேர்ந்து விடக் கூடாது என எச்சரிப்பதற்காக அந்தப் பெண் திரும்பி வந்ததாகக் கதையில் கூறப்பட்டுள்ளது.அந்த கதையில் வரும் இயற்கைச் சீற்றம் போல் தற்போது வெலர்மலா பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு ஊரே தரைமட்டமானது.

இந்த நிலச்சரிவில் நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தக் கதையை எழுதிய மாணவி லயாவின் தந்தை லெனினும் உயிரிழந்துள்ளார். அதுமட்டுமல்லாது வெலர்மலாவில் உள்ள அரசுப் பள்ளியில் படித்த 497 மாணவர்களில் 32 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மக்கள் சிறுமியின் கணிப்பு குறித்து ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.

Sudha

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

14 hours ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

15 hours ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

16 hours ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

16 hours ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

17 hours ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

17 hours ago

This website uses cookies.