டிரெண்டிங்

வீண் விளம்பரம் செய்யும் விசிக எம்பி…எப்போதுமே எம்ஜி ஆர் தான் G.O.A.T : ஜெயக்குமார் தடாலடி!

வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை துறைமுகவளாகத்தில் உள்ள அவரது சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்ட படத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய நிதியை எதிர்பார்க்காமல், தமிழக அரசு தேவையான நிதியை செலவழித்து விட்டு பின்னர் மத்திய அரசிடம் நிதியை பெற்றுக் கொள்வது தான் சிறந்த நிர்வாகமாக இருக்க முடியும்.

ஆனால் மத்திய அரசை குறை சொல்லி நிதி இல்லை என்று சொல்லுவது ஏற்புடையது இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

இன்று வெளியாக உள்ள விஜயின் போர்ட் திரைப்படம் 2000 ரூபாய் வரையில் கள்ள சந்தையில் டிக்கெட் விற்பனை செய்யப்படுவதை ஆளும் திமுக அரசு கட்டுப்படுத்த முடியாமல் தவறி இருப்பது அவர்களது இயலாமையை வெளிப்படுத்தி இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக முதலமைச்சரின் தந்தையின் புகழை பாடுவதற்கு நிதியை செலவழிக்கும் தமிழக அரசு, ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுப்பதற்கு நிதி ஆதாரம் இல்லை என கூறுவது ஏற்புடையது அல்ல எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் ஆசிரியர் கல்வியியல் பட்டப்படிப்பை கல்லூரிகளுக்கு சென்று படிக்காமலேயே பட்டம் பெரும் நிலையை விடியா திமுக ஆட்சியில் உருவாகி இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

குறிப்பாக வெளி மாநில மாணவர்களுக்கு 5 லட்சம் ரூபாய்க்கும், தமிழக மாணவர்களுக்கு 2 லட்சம் ரூபாயும் பெற்றுக்கொண்டு ஆசிரியர் கல்வியியல் பட்டப்படிப்புக்கான சான்றிதழை பெரும் நிலை தமிழக அரசின் உருவாகி இருப்பதாகவும், இவற்றை திமுக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

திமுக கார்ப்பரேட் அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து ஆசிரியர்கள் வீதிக்கு வந்து போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். ஆசிரியர்களை சாலையில் இறங்கி போராட வைத்த திமுக அரசுக்கு ஆசிரியர் தினம் கொண்டாடுவதற்கு அருகதையே இல்லை என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்து உள்ளார் .

அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக செயல்படுகிறார், இல்லை உதயநிதி ஸ்டாலினின் ரசிகர் மன்ற தலைவராக செயல்படுகிறார் என்பதே தெரியாமல் இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கோட் திரைப்படம் எந்த வகையில் சனாதனத்தை பிரதிபலிக்கிறது என்பதை விசிக எம்.பி. ரவிக்குமார் விளக்க வேண்டும். The Greatest of all time என்பது எப்போதுமே எம்ஜிஆர் தான்… அதனால் வீண் விளம்பரத்திற்காக ரவிக்குமார் பதிவிடாமல் எதற்காக இதை பதிவிட்டார் என்பதை விளக்கினால் நாங்கள் பதில் அளிக்க தயார்

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

1 day ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

1 day ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

1 day ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

1 day ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

1 day ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

1 day ago

This website uses cookies.