மூன்று பேர் மட்டுமே குடியிருக்கும் வீட்டுக்கு ஒரு லட்சத்தி 60 ஆயிரத்தி 642 ரூபாய் வந்த மின் கட்டணத்தால் அந்த வீட்டின் உரிமையாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
வேலூர் புதிய பேருந்து நிலையம் முத்து மண்டபம் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாடு, டோபி கானா அடுக்குமாடி குடியிருப்பில் 24-ம் நம்பர் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருபவர் கூலிதொழிலாளி ராணி அம்மாள். இவருடைய வீட்டில் மொத்தம் 3 பேர் மட்டுமே வசித்து வரும் சூழலில், வழக்கமாக 65 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை மட்டுமே மின் கட்டணம் வந்துள்ளது. மேலும் கடந்த முறை 95 ரூபாய் மட்டுமே மின் கட்டணம் வந்துள்ளது.
இந்த நிலையில் இந்த மாதத்துக்கான மின் அளவீடு நேற்று செய்யப்பட்டுள்ளது. அப்போது, இந்த மாதத்துக்கான கட்டணம் ஒரு லட்சத்தி 60 ஆயிரத்தி 642 ரூபாய் வந்துள்ளதாக மின் அளவீட்டாளர் அளவீடு நோட்டில் எழுதியுள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைத்தவர்கள் இது குறித்து மின் கணக்கீட்டாளரிடம் கேட்டதற்கு ‘இந்த அளவுக்கு மீட்டர் ஓடியிருப்பதாக கூறிவிட்டு சென்றுள்ளார்’
பின்னர் இது தொடர்பாக நேற்றே மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர் ராணி அம்மள் குடும்பத்தினர். இந்த நிலையில், புகாரையடுத்து இன்று சம்பவ இடத்துக்கு வந்த மின் வாரிய அதிகாரிகள் ராணி அம்மாள் வீட்டு மீட்டரை ஆய்வு செய்தனர்.
இது குறித்து மின் வாரிய துறை அதிகாரிகள் கூறியதாவது :- ராணி அம்மாள் மீட்டரில் பழைய அளவு 1756-ல் இருந்து திடீரென 26420-க்கு மின் அளவு ஜாம்ப் ஆகியுள்ளது (ஃரீடிங்). இதன் காரணமாகவே மின் கட்டணம் அதிகமாக வந்துள்ளது. மின் அளவு மாறியது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். மேலும் ராணி அம்மாள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இன்று சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்து புதிய மீட்டரை பொறுத்தியுள்ளோம்.
மேலும் பழைய மீட்டரை எடுத்து சென்று மின் அளவு மாறியதற்க்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய உள்ளோம் என கூறினர்.
அதேபோல் இந்த மாதம் ராணி அம்மாள் குடும்பத்தினர் எவ்வளவு மின் கட்டணம் கட்ட வேண்டும் என்பது குறித்து உயர் பழைய மீட்டரை ஆய்வு செய்த பிறகும், உயர் அதிகாரிகளின் ஆலோசனை படியும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
பிரபலங்கள் திடீரென திருமணம் செய்வது குறைந்த வருடங்களில் வாழ்ந்து பின்னர் விவாகரத்து செய்வது அனைத்து துறையிலும் சகஜமான விஷயமாக மாறிவிட்டது.…
மிடில் கிளாஸ் மக்களின் கனவு! ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த், மீதா ரகுநாத், சரத்குமார், தேவயானி, யோகி பாபு உள்ளிட்ட பலரது…
கோவை மாவட்டத்தில் தி.மு.க உறுப்பினர்கள் சேர்க்கை நடந்து வருகிறது.இதில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது…
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இதில்…
தி.மு.க நிர்வாகிகளை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என் உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனை பிணவறை முன்பு ஆர்ப்பாட்டத்தில்…
லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம்…
This website uses cookies.