வெயில் வாட்டி வதைத்து வரும் வேலூரில் நேற்று திடீரென வீசிய புயல் காற்று அப்பகுதி மக்களை பீதிக்குள்ளாக்கியது.
அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் கொளுத்தி வருகிறது. அந்த வகையில், வேலூரிலும் 100 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரித்து வருகிறது.
இந்த சூழலில், நேற்று பிற்பகலில் வழக்கத்திற்கு மாறாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து, குளிர்ந்த காற்றுடன் லேசான மழை தொடங்கியது. பின்னர், படிப்படியாக சூறைக்காற்று வீசியது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கூரைகளே பறந்து போகும் அளவுக்கு பலத்த காற்று வீசியது.
வேலூர் சத்துவாச்சாரி, காகிதப்பட்டறை, வள்ளலார் பெருமுகை, வசூர், பிள்ளையார் குப்பம் கொணவட்டம், காட்பாடி பிரம்மபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டியது. பல்வேறு இடங்களில் புயல் காற்றுக்கு மரக்கிளைகள் உடைந்து விழுந்ததால், வீடுகளும், வாகனங்களும் சேதமடைந்தன.
குறிப்பாக, VIT கல்லூரியில் இரும்பு மேசைகள் பறந்தன. மாணவர்களே நிலைகுலைந்து போகும் அளவுக்கு காற்று வீசியதால் அனைவரும் பீதியடைந்தனர். வேலூரில் வீசிய சூறைக்காற்றின் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.