வெயில் வாட்டி வதைத்து வரும் வேலூரில் நேற்று திடீரென வீசிய புயல் காற்று அப்பகுதி மக்களை பீதிக்குள்ளாக்கியது.
அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் கொளுத்தி வருகிறது. அந்த வகையில், வேலூரிலும் 100 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரித்து வருகிறது.
இந்த சூழலில், நேற்று பிற்பகலில் வழக்கத்திற்கு மாறாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து, குளிர்ந்த காற்றுடன் லேசான மழை தொடங்கியது. பின்னர், படிப்படியாக சூறைக்காற்று வீசியது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கூரைகளே பறந்து போகும் அளவுக்கு பலத்த காற்று வீசியது.
வேலூர் சத்துவாச்சாரி, காகிதப்பட்டறை, வள்ளலார் பெருமுகை, வசூர், பிள்ளையார் குப்பம் கொணவட்டம், காட்பாடி பிரம்மபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டியது. பல்வேறு இடங்களில் புயல் காற்றுக்கு மரக்கிளைகள் உடைந்து விழுந்ததால், வீடுகளும், வாகனங்களும் சேதமடைந்தன.
குறிப்பாக, VIT கல்லூரியில் இரும்பு மேசைகள் பறந்தன. மாணவர்களே நிலைகுலைந்து போகும் அளவுக்கு காற்று வீசியதால் அனைவரும் பீதியடைந்தனர். வேலூரில் வீசிய சூறைக்காற்றின் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.