வெயில் வாட்டி வதைத்து வரும் வேலூரில் நேற்று திடீரென வீசிய புயல் காற்று அப்பகுதி மக்களை பீதிக்குள்ளாக்கியது.
அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் கொளுத்தி வருகிறது. அந்த வகையில், வேலூரிலும் 100 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரித்து வருகிறது.
இந்த சூழலில், நேற்று பிற்பகலில் வழக்கத்திற்கு மாறாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து, குளிர்ந்த காற்றுடன் லேசான மழை தொடங்கியது. பின்னர், படிப்படியாக சூறைக்காற்று வீசியது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கூரைகளே பறந்து போகும் அளவுக்கு பலத்த காற்று வீசியது.
வேலூர் சத்துவாச்சாரி, காகிதப்பட்டறை, வள்ளலார் பெருமுகை, வசூர், பிள்ளையார் குப்பம் கொணவட்டம், காட்பாடி பிரம்மபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டியது. பல்வேறு இடங்களில் புயல் காற்றுக்கு மரக்கிளைகள் உடைந்து விழுந்ததால், வீடுகளும், வாகனங்களும் சேதமடைந்தன.
குறிப்பாக, VIT கல்லூரியில் இரும்பு மேசைகள் பறந்தன. மாணவர்களே நிலைகுலைந்து போகும் அளவுக்கு காற்று வீசியதால் அனைவரும் பீதியடைந்தனர். வேலூரில் வீசிய சூறைக்காற்றின் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.