வேலூர் ; ரோஷம் வரவேண்டியது அதிமுக கட்சிக்கு தான், திமுகவுக்கு அல்ல என்றும், அதிமுக முடியாத கட்சி ஆகிவிட்டதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 1 லட்சம் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி வேலூர் காட்பாடியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :- மத்திய அரசு மதுரையில் கொண்டு வந்த எய்ம்ஸ் மருத்துவமனையை திமுக தடுக்கவில்லை அதை மத்திய அரசு செயல்படுத்தாமல் விட்டுவிட்டது. திமுக அரசு மீது பழி சொல்வது நியாம் அல்ல.
பா.ஜ.க, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா படங்களை போட்டு வாக்கு சேகரிக்க தொடங்கியுள்ளதே என்ற கேள்விக்கு பதிலளித்த துரைமுருகன் ” ரோஷம் வரவேண்டியது அதிமுக கட்சிக்கு, திமுக வுக்கு அல்ல. அதிமுக முடியாத கட்சி ஆகிவிட்டது. கோள் ஊன்றிதான் நடப்பார்கள். அதிமுக தலைவர்களின் படங்களை பா.ஜ.க மிஸ்யூஸ் பண்ணுகிறது என்றால் அதற்கு அதிமுக தான் கோவப்படவேண்டும் திமுக அல்ல, என்றார்.
பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருகிறாரே என்ற கேள்விக்கு, ” தேர்தல் சமயத்தில் வரத்தான் செய்வார்கள். ஜல்லிக்கட்டு காலத்தில் வண்டிமாடுகள் கூட தலையாட்டும், அது அப்படித்தான், என்றார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.