ஐதராபாத் ; மாரடைப்பு ஏற்பட்டு ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 79 வயது மூத்த நடிகர் கிருஷ்ணா இன்று அதிகாலை மரணம் அடைந்தார்.
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் போற்றப்பட்ட முன்னணி நடிகர் கிருஷ்ணா இன்று அதிகாலை ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். நேற்று அதிகாலை 2 மணி அளவில் மூச்சு விடுவதில் கிருஷ்ணாவுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்று கூறி, குடும்ப உறுப்பினர்கள் அவரை ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்று கண்டுபிடித்து சிகிச்சை அளித்து பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். தொடர்ந்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று அதிகாலை மீண்டும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
1942 ஆம் ஆண்டு மே 31ம் தேதி பிறந்த கிருஷ்ணா 350க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 2007ஆம் ஆண்டு ரசிகர்கள் அவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்தனர். 2009 ஆம் ஆண்டு கிருஷ்ணாவுக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கி கௌரவித்தது. 1989 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார் கிருஷ்ணா. கடந்த 1997 ஆம் ஆண்டு அவருக்கு லைஃப் டைம் பில்ம் பேர் அவார்ட் வழங்கப்பட்டது.
2008 ஆம் ஆண்டு ஆந்திரா பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. முதலில் இந்திரா தேவி என்பவரை மணந்த கிருஷ்ணா, அதன் பின் நடிகை விஜய நிர்மலாவை திருமணம் செய்து கொண்டார். இரண்டு பேருமே மரணம் அடைந்து விட்டனர். அவருக்கு நடிகர் மகேஷ்பாபு உட்பட ஐந்து குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், இன்று அதிகாலை மரணம் அடைந்த கிருஷ்ணாவின் மறைவிற்கு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் ஆகியோர் அனுதாபம் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என்று தெலுங்கு திரையுலகிற்கு பல்வேறு சேவைகளை ஆற்றிய கிருஷ்ணாவின் மறைவு திரையுலகிற்க்கு ஈடு செய்ய இயலாத இழப்பு என்று பல்வேறு தரப்பினரும் தங்கள் அனுதாப செய்தியில் குறிப்பிட்டனர்.
கடந்த செப்டம்பர் மாதம் நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் இந்திரா தேவி மரணமடைந்த நிலையில், இருமாதங்களுக்குள் அவரது தந்தையும் உயிரிழந்திருப்பது அவரை பெரிதளவில் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.