விஜயகாந்த் உடல் வேறு இடத்திற்கு மாற்றம் : இறுதிச்சடங்கு குறித்து தேமுதிக முக்கிய அறிவிப்பு!!
நடிகராக இருந்து அரசியலில் நுழைந்தவர் விஜயகாந்த். தேமுதிகவின் நிறுவன தலைவரான இவர் உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார். அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலங்கள் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் மாநிலம் முழுவதும் இருந்து கட்சியின் தொண்டர்கள், ரசிகர்கள் ஏராளமானவர்கள் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த கூடி வருகின்றனர்.
இதனால் நேரம் செல்ல செல்ல தேமுதிக அலுவலகத்தில் கூட்டம் என்பது அதிகரித்து வருகிறது. அதிகளவில் மக்கள் கூட அங்கு போதிய இடவசதி இல்லை. இதனால் விஜயகாந்தின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட உள்ளது.
தேமுதிக அலுவலகத்தில் இருந்து விஜயகாந்தின் உடல் நாளை அதிகாலை 4 மணிக்கு தீவுத்திடலுக்கு எடுத்து செல்லப்பட உள்ளது. இதையடுத்து அங்கு வைத்து மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்த உள்ளனர். அதன்பிறகு மதியம் 1 மணிக்கு விஜயகாந்த் உடல் தீவுத்திடலில் இருந்து தேமுதிக அலுவலகம் எடுத்து வரப்பட உள்ளது. இதையடுத்து இறுதி சடங்குகள் செய்யப்பட்டு மாலை 4.45 மணிக்கு விஜயகாந்தின் உடல் தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.