விருதுநகர் : விருதுநகரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணம் அடைந்த சம்பவத்தில் நீதி வேண்டி பாஜக நாளை ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- விருதுநகர் மாவட்டம் செம்பட்டியை சேர்ந்த தங்கப்பாண்டி என்னும் இளைஞரை காவல்துறையினர் கைது செய்து துன்புறுத்தியதால் மரணமடைந்துள்ளார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
குற்றமற்றவர் என்று காவல்துறையினர் விடுதலை செய்த பின்னும், ஆளுங்கட்சியினரின் அழுத்தத்தின் காரணமாக மீண்டும் சகோதரர் தங்கப்பாண்டியை காவல்துறை கைது செய்ததாக தெரிகிறது.
இதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து சகோதரர் தங்கப்பாண்டி இறப்புக்கு காரணமான அனைவருக்கும் உரிய தண்டனையை பெற்றுத்தர திமுக ௮ரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சகோதரர் தங்கப்பாண்டியனின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், 25 லட்ச ரூபாய் இழப்பீடாகவும் உடனடியாக வழங்க வேண்டும் என்பது தமிழக பாஜகவின் கோரிக்கை.
காவல்துறையினரின் தொடர் அத்துமீறலுக்கும் அடக்குமுறைக்கும் எதிராக சகோதரர் தங்கப்பாண்டியின் இறப்புக்கு நீதி கேட்டு, மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து,
நாளை தமிழக பாஜக விருதுநகர் கிழக்கு மாவட்டத்தின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது, எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.