ஆந்திரா : ஏழுமலையானை தரிசிப்பதற்கு தேவையான இலவச தரிசன டிக்கெட்டுகள் நாளை காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையானை பிப்ரவரி மாதம் தரிசிக்க தேவையான 300 ரூபாய் டிக்கெட் இன்று ஆன்லைனில் வெளியிடப்பட்டன. இன்று காலை 9 மணிக்கு நாளொன்றிற்கு 12,000 என்ற எண்ணிக்கையில் வெளியிடப்பட்ட டிக்கெட்டுகளை பக்தர்கள் போட்டி போட்டு முன்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் பிப்ரவரி மாதம் ஏழுமலையானை தரிசிப்பதற்கு தேவையான இலவச தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தான நிர்வாகம் நாளை காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிட உள்ளது. நாள் ஒன்றுக்கு 10,000 என்ற எண்ணிக்கையில் பிப்ரவரி மாதம் முழுவதற்குமான டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிடப்படும்.
டிக்கெட்டுகள் தேவையான பக்தர்கள் தேவஸ்தானத்தின் https://tirupatibalaji.ap.gov.in/வெப்சைட்டில் அவற்றை முன்பதிவு செய்யலாம்.
இந்த நிலையில் அடுத்த மாதம் 15-ம் தேதிக்கு பின் திருப்பதியில் உள்ள கவுண்டரில் இலவச தரிசன டோக்கன் பக்தர்களுக்கு வழங்கப்படும் என்று தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி அறிவித்துள்ளார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.