அமலாக்கத்துறை முடக்கிய சொத்துக்களுக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை விளக்கமளித்துள்ளது.
இதுதொடர்பாக அறக்கட்டளையின் அறங்காவலர் பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு முறையாக அரசு அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதாகவும், வரவு – செலவு கணக்குகளை முறையாக வருமான வரித்துறையிடம் தாக்கல் செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அமலாக்கத் துறை குறிப்பிட்டுள்ள 36 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கத்திற்கும் அறக்கட்டளைக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு எந்த அசையா சொத்தும் கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அமலாக்கத்துறை வெளியிட்ட ட்விட்டர் பதிவு தவறாக சித்தரிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார். அமலாக்கத் துறை முடக்கியுள்ள 34 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கான ஆவணங்களைக் கொடுத்து சட்டப்படி மீட்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துளார்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.