கூட்டணி தர்மத்துக்காக பாஜக செய்வதை பொறுத்துக்கொண்டோம்.. மாற்றான்தாய் மனப்பான்மையோடு தான் மத்திய அரசு உள்ளது : இபிஎஸ் பேச்சு!!
சென்னை வானகரத்தில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் அதிமுக அவை தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய் உள்ளது. போராடக்கூடிய விவசாயிகள் மீது கூட குண்டர் சட்டம் பதிவு செய்யப்படுகிறது. திமுக அரசுக்கு இறங்கு முகம் தொடங்கிவிட்டது. எப்போது அதிமுக ஆட்சிக்கு வரும் என மக்கள் கேட்கின்றனர்.
மதுரை மாநகரமே குலுங்கும் அளவுக்கு அதிமுக மாநாடு நடைபெற்றது. மதுரையை அதிர வைத்த அதிமுக மாநாடு. வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 15 லட்சம் பேர்கலந்துக்கொண்ட மதுரை மாநாட்டை அதிமுக நடத்தியது. எதிரிகள் அஞ்சும் அளவில் மதுரை மாநாட்டை நடத்திய அதிமுக, மதுரை மாநாட்டை போல் இனி எந்த கட்சியும் நடத்த முடியாது என தெரிவித்தார்.
பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை கடந்த செப்டம்பர் மாதமே தெரியப்படுத்திவிட்டோம். கூட்டணி தர்மத்துக்காக மக்கள் விரோத செயல்களையும் பொறுத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை இருந்தது. பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதால் முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு தூக்கம் போய்விட்டது என கூறினார்.
மாற்றான் தாய் மனப்பான்மையுடன் தான் மத்திய அரசுகள் எப்போதும் நடந்து கொண்டிருக்கின்றது. காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் பாஜகவாக இருந்தாலும் மாநிலத்தை யார் ஆட்சி செய்தாலும் மத்திய அரசுகள் எப்போதும் தேவையான நிதியை வழங்கியதே கிடையாது எனவும் குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.