ஆட்சிக்கு வந்தபின் சந்திரபாபு நாயுடு இன்று தன்னுடைய சொந்த தொகுதியான குற்றம் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் அப்போது ஸ்ரீசைலம் அணையில் இருந்து ஆந்திராவின் ராயல் சீமா பகுதிகளில் நிர்வாகம் திட்டங்களை மேற்கொள்ள அமைக்கப்படும் ஹந்திரி நிவா கால்வாய் பணிகளை பார்வையிட்ட அவர் இந்த பணிகள் விரைவு செய்யப்பட்டு அடுத்த ஆண்டு குப்பம் வரை சிசையில மழையில் இருந்து தண்ணீர் வந்து சேர்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.
மேலும் இத்திட்ட மூலம் கிருஷ்ணா நதியில் இருந்து சுமார் 720 கிலோமீட்டர் தொலைவிற்கு பிரம்மாண்ட கால்வாய் அமைக்கப்பட்டு அனந்தபுரம், கடப்பா, கர்னூல், சித்தூர் போன்ற மாவட்டங்களில் 33 லட்சம் மக்களின் குடிநீர் தேவை மற்றும் விவசாய பயன்பாட்டுக்காக தண்ணீர் கொண்டு வரப்பட உள்ளது. குப்பம் தொகுதி கால்வாய் அமைப்பதற்கு மட்டும் 474 கோடி நிதி ஒதுக்கி இரண்டு டிஎம்சி தண்ணீர் கொண்டு வரப்பட உள்ளது.
கடந்த ஆட்சி காலத்தில் பணிகள் கிடப்பில் போடப்பட்டதாகவும் கண் துடைப்பிற்காக நீர் கொண்டு வந்ததாக ஜெகன்மோகன் மக்களை ஏமாற்றியதாகவும் எஞ்சி உள்ள பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
குப்பம் தொகுதிக்கு கிருஷ்ணா நீர் கொண்டுவரப்படுவதன் மூலம் இங்குள்ள 74 ஏரிகளில் தேக்கி அந்த தண்ணீரை பாசனத்திற்கு பயன்படுத்துவோம் என்றும் பாலாற்றில் எத்தனை தடுப்பணைகள் கட்ட வாய்ப்புகள் உள்ளதோ அத்தனை இடங்களிலும் அணைகளை கட்டி உங்களுடைய நிலங்களுக்கு பாசன வசதி அளிப்போம் என்று அப்போது கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.