இந்து கோவில்களை தொட்டால் அனைத்து ஆயுதங்களையும் எடுப்போம் : பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஹெச் ராஜா!!

கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், 1979ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் நீதிபதி சந்திர சூட் தலைமையில் 5 நீதிபதி கொண்ட அமர்வில் வழங்கப்பட்ட தீர்ப்பில் சொல்லப்பட்டது என்னவென்றால் ஆளுநருக்கு இணையான நிர்வாகியாக கூட முதல்வர் இருக்க முடியாது. ஒரு மாநிலத்தின் தலைமை நிர்வாக அதிகாரம் படைத்தவர் முதல்வர் அல்ல. ஆளுநர் தான் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

அமைச்சர் பொன் முடி, கே.என்.நேரு ஆகியோர் மீது ED வழக்கு உள்ளது. ஒவ்வொருத்தராக அனுப்பாலம் இல்லையென்றால் மொத்தமாக அனைவரையும் அனுப்பலாம். ஆனால் அதை செய்யவில்லை. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரலாம் என்பது எனது கனிப்பு.

அரசியில் சாசன படி ஆளுநர் சரியாக தான் செயல்படுகிறார். பீகாரியைக் முட்டாள் என்று சொன்னால் ஸ்டாலின் பீகாருக்கு வர கூடாது என்று சொன்னார்கள். ஆனால் அதையெல்லாம் தாண்டி வெட்கமே இல்லாமல் பீகாருக்கு சென்று வந்தார் ஸ்டாலின் இன்றும் அதேபோல் அந்த பீகார் கூட்டத்தில் ஆங்கிலமும் தெரியாமல், தமிழும் தெரியாமல் முதல்வர் ஸ்டாலின் அமர்ந்திருந்தார் என்று பிரஷாந்த் கிஷோர் சொல்லியிருக்கிறார். இது கண்டிதக்கது.

ஒரு மாநிலத்தையே பிரஷாந்த் கிஷோர் இழிவு செய்துள்ளார். உங்களுக்காக பேசுவது போல் விபரம் தெரியாமல் பேசும் தீய சக்திகளையும், ஆளுநர் பற்றி ஏதும் தெரியாமல் விவாதம் செய்யும் சில யூடியூபர்கள் பேசுபவதையும் ஸ்டாலின் நம்பக்கூடாது. அவர்களை அடக்கி வைக்க வேண்டும். உங்களுக்காக கொம்பு சீவி விட்டு பேசி, உங்களை வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்.

கோவில் விஷயத்தில் சேகர் பாபு விளையாடக்கூடாது. குறிப்பாக சிதம்பரம் கோவிலை கட்டியது தீட்சியர்கள் தான். எனவே கோவிலை கட்டியது மன்னர்கள் என்று ஈ.வெ.ரா.வை பின்பற்றும் முட்டாள்கள் சொல்கின்றனர். இந்து மதத்தை மொட்டியடிக்க இந்த இந்து விரோத அரசு செயல்படுகிறது. கோவில் விஷயத்தில் சேகர்பாபு விளையாடக்கூடாது. கோவில் சொத்தை தொட்டால் குடி அழியும். இதுவே சேகர்பாபுவுக்கு இறுதி எச்சரிக்கை.

சிதம்பரம் நடஜாரை தொட்டால் அவ்வளது தான். அமைச்சர் சேகர்பாபு சிவனிடம் விளையாட வேண்டாம். நடராஜரைக் அளித்தால் அது நடக்காது. மேலும் கோவில் மாடுகளை எல்லாம் கேரளாவுக்கு வெட்டுக்கு அனுப்புவதாக தகவல் வருகிறது. இந்து கோவில்களைக் தொட்டால் பாஜக தன்னிடம் உள்ள அனைத்து ஆயுதங்களையும் கையில் எடுக்கும் எனவும் அவர் எச்சரித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

3 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

3 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

4 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

5 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

5 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

6 hours ago

This website uses cookies.