மேற்கு வங்க அரசியலின் கிங்: முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா காலமானார்: தலைவர்கள் இரங்கல்…!!

மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான புத்ததேவ் பட்டாச்சார்யா இன்று காலை தனது வீட்டில் உயிரிழந்தார்.இரண்டு அறைகள் கொண்ட அரசு குடியிருப்பில் அவர் தங்கியிருந்தார்.

1977 முதல் 2011 வரை மாநிலத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சியில் முக்கிய நபராக விளங்கிய இவர், 2000 முதல் 2011 வரை மாநிலத்தின் முதல்வராகவும் பணியாற்றியிருக்கிறார்.

மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகாலம் ஆட்சிபுரிந்த இடது முன்னணி ஆரசு காலத்தில் பட்டாச்சார்யா இரண்டாவது மற்றும் கடைசி CPM முதலமைச்சராக இருந்தார். அவர் 2000 முதல் 2011 வரை தொடர்ந்து 11 ஆண்டுகள் முதல்வராக பணியாற்றினார்.

மேற்கு வங்கத்தில் கடைசி முதல்வராகப் பதவிவகித்த கம்யூனிஸ்ட் தலைவரான புத்ததேவ் பட்டாச்சார்யா, 2016-க்கு பிறகு தேர்தல் பிரச்சார மேடைகளில் தோன்றவில்லை.

நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயால் அவதிப்பட்டு வந்த புத்ததேவ் பட்டாச்சார்யா, கடந்த சில ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியேறுவது அரிது. அவர் கடைசியாக 2019 ஆம் ஆண்டு சி.பி.எம் பேரணிக்கு சென்றார்.ஆனால் தூசி ஒவ்வாமை காரணமாக பேரணியில் கலந்து கொள்ள முடியாமல் வீடு திரும்பினார்.2021 சட்டமன்றத் தேர்தலின்போது கூட அவரின் ஆடியோ க்ளிப் வெளியிடப்பட்டது.

அதற்குப் பிறகு, கடந்த மே மாதம் நடந்த மக்களவைத் தேர்தலின்போது புத்ததேவ் பட்டாச்சார்யா, கம்யூனிஸ்ட் வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்பது போல AI தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட வீடியோ ஒன்றை கட்சி வெளியிட்டிருந்தது. இத்தகைய சூழலில், கடந்த பல ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த புத்ததேவ் பட்டாச்சார்யா, இன்று காலை தனது வீட்டில் உயிரிழந்தார்.அவர் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Sudha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.