எம்ஜிஆர், ஜெ., புகைப்படங்களை பயன்படுத்திய பாஜக.. கீழ்த்தரமான அரசியல் : ஜெயக்குமார் ஆவேசம்!

எம்ஜிஆர், ஜெ., புகைப்படங்களை பயன்படுத்திய பாஜக.. கீழ்த்தரமான அரசியல் : ஜெயக்குமார் ஆவேசம்!

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பல விஷயங்களைக் குறித்து விரிவாக பேசினார். லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று அவர் தெரிவித்தார்

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பொதுவாக எந்தவொரு தலைவர் பிறந்த நாளாக இருந்தாலும் ஒரு நாள் மட்டுமே கொண்டாடப்படும். ஆனால், அதிமுக தலைவர்கள் பிறந்த நாள் முழுக்க கொண்டாடப்படும்.

அந்தளவுக்குச் செல்வாக்கு பெற்ற தலைவர்கள். திமுகவை போல இல்லாமல் அதிமுகவினர் மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள். இதனால் ஆட்சியில் இல்லை என்றாலும் சொந்த செலவில் நலத்திட்டப் பணிகளைச் செய்து வருகிறார்கள். 30 ஆண்டுகள் ஆண்ட கட்சி, 2026இல் ஆளப்போகிற கட்சி நாங்கள் தான்” என்றார்.

புதுச்சேரியில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் வைக்கப்பட்டுள்ள பாஜக பேனர்கள் குறித்த கேள்விக்கு அவர், “இதற்குப் புதுச்சேரி அதிமுக பிரிவு சார்பில் அதிகாரப்பூர்வமாகக் கண்டனம் தெரிவித்துள்ளோம். எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை பாஜக பயன்படுத்த வெட்கப்பட வேண்டும்.

எதற்காக இப்படி எங்கள் தலைவர்கள் படங்களைப் பயன்படுத்துகிறீர்கள். அப்படி என்றால் உங்கள் தலைவர்கள் மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லை என்பதையே இது காட்டுகிறது.

எம்ஜிஆர், ஜெயலலிதா முகங்களைக் காட்டி மக்களை ஏமாற்ற முயன்றால் அது நடக்காது. அந்த இரண்டு முகங்களுக்கு அதிமுக மட்டுமே சொந்தமானது. இப்படியொரு கீழ்த்தரமான அரசியலை பாஜக கையில் எடுத்துள்ளது.

திருச்சியில் அண்ணாமலை பேசுவதைப் பார்த்து இருப்பீர்கள். ஏதோ இதுவரை இல்லாத வகையில் மிகப் பெரிய எழுச்சி மாநாட்டை நடத்துவதாக அண்ணாமலை கூறியிருந்தார்.

ஆனால், நான் டிவியில் பார்த்தேன் எல்லா சேர்களும் காலியாக இருந்தது. காலி சேர்களை பார்த்து அண்ணாமலை பேசி வருகிறார். அந்தக் கூட்டத்தில் யாருமே இல்லை. தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எந்தவொரு ஆதரவும் இல்லை” என்றார்.

மேலும், அவர், “திமுகவுக்கும் பாஜகவும் இடையே மறைமுக கூட்டு இருக்கிறது. நாங்கள் அடிப்பது போல அடிக்கிறோம். நீங்கள் அழுவது போல அழுங்கள் என சொல்லி வைத்துவிட்டுச் செய்கிறார்கள்.

மோடி தமிழகம் வருவதால் ஒன்னும் நடக்காது. அதிகபட்சம் ஒன்று அல்லது இரண்டு சதவிகித வாக்குகள் அதிகம் கிடைக்கும். பாஜக சமூக வலைத்தளங்கள் மூலம் தங்களுக்குத் தாங்கலே பில்டப் தருவார்கள். ஆனால், களத்தில் எந்தவொரு பலனும் இல்லை. நாங்கள் என்ன குழந்தையா எங்களை யாராலும் மிரட்ட முடியாது.

1970களிலேயே வராதா மிரட்டல்களா. எம்ஜிஆர் கட்சியைத் தொடங்கிய போது அதிமுகவை முடக்கக் கருணாநிதி தராத மிரட்டல்களா. அதையெல்லாம் நாங்கள் பார்த்தவர்கள்.. 1000 கருணாநிதி, 1000 ஸ்டாலின் வந்தாலும் அஞ்சாதவர்கள். பாஜகவுக்கா அஞ்சப் போகிறோம்.

நாங்கள் யாரை நம்பியும் இல்லை. எங்களுக்கென தனித்தன்மை இருக்கிறது. மக்கள் ஆதரவு கடந்த காலங்களிலும் இருந்துள்ளது. எனவே, அவர்கள் கூட்டணியில் இருக்கும் பிரச்சினையை வைத்துக் குளிர்காய வேண்டிய அவசியம் இல்லை. அதேநேரம் அவர்கள் வந்தால் வரவேற்போம்” என்றார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

6 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

6 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

6 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

7 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

7 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

8 hours ago

This website uses cookies.