ஜெய்ஷா என்ன கிரிக்கெட் வீரரா? இல்ல கிரிக்கேட் கோச்சரா? அமித்ஷா பேச்சுக்கு முதலமைச்சரின் மகன் பதிலடி!!

ஜெய்ஷா என்ன கிரிக்கெட் வீரரா? இல்ல கிரிக்கேட் கோச்சரா? அமித்ஷா பேச்சுக்கு முதலமைச்சரின் மகன் பதிலடி!!

மத்திய உள்துறை அமைச்சர் தெலுங்கானாவில் நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகராவின் ஒரே ஒரு கனவு, மகன் கேடி ராமாராவை முதல்வராக்குவது என்பதுதான்.

தெலுங்கானவில் சந்திரசேகர ராவ் ஆட்சிதான் தொடர வேண்டுமா? அல்லது மத்தியில் மாநிலத்தில் ஒரே கட்சியின் பாஜகவின் இரட்டை என்ஜின் அரசு அமைய வேண்டுமா? என்பதை வாக்காளர்கள் முடிவு செய்ய வேண்டும்.

பழங்குடியினர் நலனுக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்தவர் பிரதமர் மோடிதான் என்றார். அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு, கேடி ராமாராவ் பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் கூறும்போது, வாரிசு அரசியல் பற்றி அமித்ஷா பேசுவதுதான் வேடிக்கையானது. அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாதான் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர்.

இந்த பதவிக்கு வருவதற்கு முன்னர் ஜெய்ஷா என்ன கிரிக்கெட் வீரரா? கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியவரா? அல்லது கிரிக்கெட் வீரர்களுக்கு கோச்சிங் நடத்தியவரா? பிறகு எப்படி இந்த பதவிக்கு ஜெய்ஷாவால் வர முடிந்தது என்பதை அமித்ஷா விளக்குவாரா?

மக்களிடம் ஓட்டு கேட்பதற்கு முன்பாக, 10 ஆண்டுகளில் பாஜக தெலுங்கானா மக்களுக்கு செய்தது இவை என பட்டியல் போட்டு பிரசாரம் செய்ய முடியுமா?

தேர்தல் காலங்களில் பாஜக தலைவர்கள் அள்ளிவிடுகிற வெற்று வாக்குறுதிகளை நம்பி நம்பி ஏமாந்து போய் சோர்வடைந்துவிட்டனர் மக்கள். மத்தியில் பாஜக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் எல்லாம் தெலுங்கானா மாநில அரசை பார்த்து காப்பியடித்ததுதான். இவ்வாறு கேடி ராமாராவ் கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.