ரூ.4 ஆயிரம் கோடிக்கு சென்னையில் என்ன வேலை நடந்துச்சு? நீதிபதி தலைமையில் ஆடிட்.. திமுகவுக்கு மீண்டும் செக் வைக்கும் அண்ணாமலை!

ரூ.4 ஆயிரம் கோடிக்கு சென்னையில் என்ன வேலை நடந்துச்சு? நீதிபதி தலைமையில் ஆடிட்.. திமுகவுக்கு மீண்டும் செக் வைக்கும் அண்ணாமலை!

சென்னை வெள்ளம் குறித்து திமுக அரசிடம் கேட்க நிறைய கேள்விகள் இருப்பதாகவும் ஆனால் இந்தச் சூழலில் அரசியல் வேண்டாம் என்பதால் தவிர்த்து வருவதாகவும் இயல்பு நிலை திரும்பிய பிறகு கேட்போம் எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை புறநகர் பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட அவர் செய்தியாளர்களை சந்திக்கும் போது இதனைக் கூறினார். மத்திய அரசு கொடுத்த பணமெல்லாம் எங்கே, யார் ஒப்பந்ததாரர், என்ன பணிகள் நடந்தது, எவ்வளவு செலவு செய்திருக்கிறார்கள் என்பன உள்ளிட்ட விவரங்களை எல்லாம் சிட்டிங் நீதிபதி தலைமையில் ஆடிட் செய்ய வேண்டும் என்றும் இதனை முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்றுக்கொள்வாரா எனவும் சவால் விடுத்துள்ளார்.

திருப்புகழ் ஐ.ஏ.எஸ்.ஸை பற்றி குறை சொல்லவோ விமர்சிக்கவோ முடியாது என்றும் அவர் அப்பழுக்கற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றும் அவர் கொடுத்தப்படி திட்ட அறிக்கையை தமிழக அரசு செயல்படுத்தியதா என்பது தான் கேள்வி எனவும் அண்ணாமலை எழுப்பியுள்ளார்.

இன்னும் ஓரிரு நாட்களில் திமுக அரசின் ரூ.4,000 கோடி செலவு குறித்து தாங்கள் கேள்விகளை முன் வைப்போம் எனக் கூறிய அண்ணாமலை, மாநிலத்தின் தலைநகரிலேயே இப்படி வெள்ளம் வருகிறது என்றால் தமிழ்நாட்டிற்கு எப்படி உலக முதலீட்டாளர்கள் வருவார்கள் அவர்கள் எப்படி இங்கு தொழிற்சாலைகள் அமைப்பார்கள் என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார் அண்ணாமலை.

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார் என பெருமிதம் தெரிவித்தார் அண்ணாமலை.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.