செந்தில்பாலாஜிக்கு சிறையில் என்னாச்சு? முதலில் ஸ்டான்லி… பின்னர் ஓமந்தூரார் : அவசர அவசரமாக மருத்துவமனை மாற்றம்!!!
பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இன்று ( 15 ம் தேதி) மதியம் உணவு உட்கொண்ட போது வாந்தி, எடுத்ததாகவும் மயக்கம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்ட அவர் மருத்துவமனைக்குள் வீல் சேர் மூலம் அழைத்து செல்லப்பட்டார். நாளை மாலை வரை மருத்துவ சிகிச்சையில் இருப்பார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்குஒரு மணிநேரம் வரையில் இசிஜி , எக்ஸ்ரே , ரத்தப்பரிசோதனை போன்றவை சோதனை செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.
மேலும் இருதயவியல் பரிசோதனைக்காக ஓமந்தூரார் மருத்துவமனக்கு அழைத்து செல்லப்படுவதாக தகவல் தெரிவிக்கின்றன.
இதயம் மற்றும் கழுத்து வலிப்பதாக அவர் கூறிய நிலையில் அந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து செந்தில் பாலாஜிக்கு மேல் சிகிச்சை தேவை என டாக்டர் பரிந்துரைத்தாக தகவல் வெளியாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
This website uses cookies.