கோட்டையில் கொடி பறப்பதால் திமுக அரசுக்கு என்ன ஆணவமா? கொந்தளித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன்!!
சென்னை – பனையூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வீடு அமைந்துள்ளது. இவரது வீட்டின் அருகே பாஜகவினரின் சார்பில் சுமார் 50 அடி உயரத்திற்கு கட்சிக் கொடிக்கம்பத்தை அமைத்துள்ளனர். இந்தக் கொடிக்கம்பத்தை அமைக்க நெடுஞசாலைத்துறையின் அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது.
அதோடு, அந்தப் பகுதியில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சிலர், கொடிக்கம்பம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, பாஜகவினரும் அப்பகுதியில் கூடினர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் வந்துள்ளனர்.
அப்போது, இருதரப்பினரிருடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த சமயம், நெடுஞ்சாலைத்துறையிடம் அனுமதி பெறாமல் கொடிக்கம்பத்தை வைத்துள்ளதாகக் கூறி, அதனை அகற்ற வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்பினர் வலியுறுத்தினர். கொடிக்கம்பத்தை அகற்ற போலீசார் ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்தனர்த. இதனால், ஆத்திரமடைந்த பாஜக பாஜகவினர், ஜேசிபி கண்ணாடியை உடைத்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், போலீசாருக்கும், பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், பாஜக நிர்வாகி ஒருவரின் மண்டை உடைந்து, இரத்தம் பீரிட்டு வந்தது.
தொடர்ந்து, கொடிக்கம்பத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். பின்னர், கொடிக்கம்பம் அகற்றப்பட்டது. நள்ளிரவு நடைபெற்ற இந்த சம்பவத்தால் சென்னையில் பரபரப்பு நிலவி வருகிறது.
இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தனது X தளபதிவில், கோட்டையில் உங்கள் கொடி பறப்பதால் – திமுக அரசுக்கு என்ன ஆணவமா?
தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் திரு. அண்ணாமலை அவர்களின் இல்லத்திற்கு வெளியே வைக்கப்பட்ட கட்சி கொடி கம்பத்தை காவல்துறை மூலமாக தமிழக அரசு அகற்றியுள்ளனர். இந்த செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
ஒரு கொடி கம்பத்தை அகற்றினால் பல ஆயிரம் கொடி கம்பங்கள் வரும் காலங்களில் நடப்படும். பூனை தன் கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடும் என்று எண்ணிக்கொள்ளுமாம்..!
அதுபோல ஒரு கொடி கம்பத்தை அகற்றிவிட்டதால் பாஜகவின் வளர்ச்சியை கனவிலும் தடுக்க முடியாது என்பதை இந்த போலி திராவிட மாடல் அரசுக்கு தெரிவித்து கொள்கிறேன் என அவர் பதிவிட்டுள்ளார்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.