மகளிர் உரிமைத் தொகை என்னாச்சு? உங்களை நம்பித்தானே ஓட்டு போட்டேன் ; CM ஸ்டாலினிடம் கேள்வி கேட்ட பெண்!!

மகளிர் உரிமைத் தொகை என்னாச்சு? உங்களை நம்பித்தானே ஓட்டு போட்டேன் ; CM ஸ்டாலினிடம் கேள்வி கேட்ட பெண்!!

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசி வருகிறார்.

இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் சம்பத்நகரில் உள்ள உழவர் சந்தை அருகே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை வாக்கு சேகரித்தார். நடைபயிற்சி மேற்கொண்ட அவர், உழவர் சந்தையில் காய்கறி வாங்க வந்தவர்களிடம் கலந்துரையாடி வாக்கு சேகரித்தார். முதல் அமைச்சருடன் பொதுமக்கள் ஆர்வமுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

அப்போது காய்கறி விற்பனை செய்யும் பெண்ணிடம் வாக்கு சேகரித்த போது, அந்த பெண் மகளிர் உரிமைத் தொகை தனக்கு கிடைக்கவில்லை, நம்பிதானே ஓட்டு போட்டேன் என கூறினார்.

அதற்கு முதலமைச்சர், உங்கள் வீட்டில் அரசு பணியாளர் இருக்கிறார்களா என கேட்டார், அதற்கு ஆமாம், கணவர் அரசு வேலை செய்கிறார் என கூறினார். அதற்கு முதலமைச்சர், அரசு வேலை செய்பவர்கள் வீட்டில் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது என கூற, எனக்கு பதில் என் கணவர் சாப்பிட்டால் போதுமா சார் என கேள்வி கேட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து, மாலை 5 மணிக்கு ஈரோடு அருகே உள்ள சின்னியம்பாளையத்தில் நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி சின்னியம்பாளையத்தில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.