திருநெல்வேலி மாவட்டம் அடை மிதிப்பான் குளம் கல்குவாரியில் பாறையில் சிக்கிய ஆறு பேரில் இதுவரை இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மூன்று பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து குவாரியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்பு படையினர் இணைந்து ஆறாவது நபரான ராஜேந்திரன் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் கல்குவாரி விபத்து குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. மேலும் பேரறிவாளன் விடுதலையொட்டி வெளியான தீர்ப்பை பாராட்டியதும், பேரறிவாளனை நேரில் கட்டியணைத்து தழுவி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இதே போல அவரது மகனும், எம்எல்ஏவுமான உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி படத்தின் சிறப்பு காட்சியை பார்த்து படக்குழுவை பாராட்டினார். இதைத் தொடர்ந்து கோவை மாவட்டத்திற்கு வருகை தந்த அவர் தொல்லியல் கண்காட்சியை தொடங்கி வைத்து தொழில்முனைவோர்களுடன் கலந்துரையாடினார்.
பின்னர் நீலகிரி மாவட்டத்திற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் உதகை மலர் கண்காட்சியை துவக்கி வைத்தார். இப்படி மாவட்டம் மாவட்டமாக செல்லும் முதலமைச்சர், கல்குவாரி விபத்து குறித்து நெல்லையில் முகாமிடதது ஏன் என்ற கேள்வி பரவலாக எழுந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி படம் வெளியானது. இது குறித்து ராணுவ வீரர் ஒருவர் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் நெஞ்சுக்கு நீதி படத்தின் விமர்சனம் குறித்து ஊடகங்கள் செய்திகளை வெளியிடுவதாகவும் கல் குவாரி விபத்தில் 6வது நபர் இன்னும் கிடைக்காமல் இருக்கும் பட்சத்தில் அதை பற்றி செய்தி வெளியிடவில்லை, ஒரு வேளை தென்மாவட்டத்தை புறக்கணிக்கிறார்களே, ஓட்டுப்போட்ட மக்கள் தப்பா என குமுறியுள்ளார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.