முன்னாள் பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா சிவா பாஜக தலைவர் அண்ணாமலையை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த முன்னாள் நிர்வாகி சிவராமன் தற்கொலை செய்தது, அவருடைய தந்தை விபத்தில் இறந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அண்ணாமலை விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். அண்ணாமலையின் இந்த பதிவுக்கு கண்டனம் தெரிவிததுள்ள சூர்யா சிவா, முகாமில் 8-ம் வகுப்பு மாணவிகள் 19 பேர் கலந்து கொண்டனர் அதில் 13 பெண் குழந்தைகள் கொடுத்து புகார் அடிப்படையில் போக்சோ வழக்கு பதியப்பட்டு பள்ளி நிர்வாகத்தை சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஒரு குழந்தை முக்கிய குற்றவாளி நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சிவராமன் என்பவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார் என்ற செய்திகள் வெளிவரும் போது கமுக்கமாக வாயை பொத்திக் கொண்டிருந்த முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலை, தேவையில்லாத விஷயங்களுக்கு வாய் கிழிய பேசும் அண்ணாமலை, பத்திரிக்கையாளர்களை பார்த்தாலே ஊருக்கே வியாக்கியானம் பேசும் அண்ணாமலை,
ஒரு கண்டனத்தை கூட பதிவு செய்யாதது ஏன்? குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறாதது என்?
பாலியல் குற்றத்தில் கைது செய்யப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் எலி மருந்து சாப்பிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட நபருக்கு வக்காலத்து வாங்குறியே வெக்கமா இல்ல, சிவராமனின் தந்தை மதுபோதையில் கீழே விழுந்து விபத்தில் சிக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில் சிவராமனும், அவனது தந்தை மரணத்தின் ரகசியத்தை வெளிக் கொண்டு வர சிறப்பு புலனாய்வு தேவை என்று
சொல்லும் அளவுக்கு அண்ணாமலை மனசு மறுத்துப் போய்விட்டதா. உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு நடந்திருந்தால் இப்படித்தான் பேசுவீர்களா?
உங்களையெல்லாம் அரசியல் தலைவர் என்று சொல்லிக் கொள்வதற்கு உங்களுக்கே கூச்சமாக இல்லையா?
பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட பாஜககாரனுகளை காப்பாற்றிய பழக்க தோசத்தில், அடுத்த கட்சி பாலியல் குற்றவாளிக்கும் முட்டு கொடுக்கும் அளவுக்கு அண்ணாமலை இறங்கிவிட்டாரோ?உங்களை போல் இரக்கம் இல்லாத மனிதர்களுக்கு கண்டிப்பாக பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வலி புரியாது, தயவுசெய்து இனி நான் ஐபிஎஸ் பிடித்தவன் என்று கூறி அந்த மூன்று எழுத்துக்கு உண்டான மரியாதையை கெடுக்காதீர்கள் @annamalai_k
பெண்களுக்கு ஏதாச்சும் ஒன்று என்றால் கையை வெட்டுவோம் காலை வெட்டுவோம் என்று மேடைகளில் பேசக்கூடிய அண்ணாமலையும், சீமானும் இந்த விஷயத்தில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
அண்ணாமலையின் இந்த வக்கிர மனநிலையை பரிசோதிக்க சிறப்பு மருத்துவ குழுவை அமைத்து பரிசோதிப்பது நல்லது என்று அரசாங்கத்தை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.