இத்தனை நாள் தொகுதிப் பக்கம் ஏன் வரல? கரூரில் ஜோதிமணியை சூழ்ந்த மக்கள்.. சரமாரிக் கேள்வி!
ஜோதிமணி இன்று கோடங்கிபட்டி ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் பிரசாரம் செய்தார். பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவரை ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இந்த சமயத்தில் கையில் ஆரத்தியுடன் நின்ற பெண் ஒருவர் ஜோதிமணியிடம் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டார்.
அதாவது கடந்த தேர்தலில் ஓட்டு கேட்டபோது உங்களை பார்த்தோம். அதன்பிறகு இப்போது மீண்டும் ஓட்டு கேட்க வந்ததால் உங்களை பார்க்கிறோம். இவ்வளவு நாள் ஏன் வரவில்லை? ஓட்டு கேட்க மட்டும் ஏன் வருகிறீர்கள்? என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டுள்ளார்.
இதையடுத்து ஜோதிமணி அருகே நின்ற திமுக நிர்வாகிகள் அப்புறமாக அதனை பேசி கொள்ளலாம் எனக்கூறி ஜோதிமணியை அங்கிருந்து அழைத்து சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த தொகுதியில் கடந்த 2019 லோக்சபா தேர்தலில் ஜோதிமணி திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டார். அந்த தேர்தலில் அவர் லட்சத்து 95 ஆயிரத்து 697 ஓட்டுகள் பெற்றார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தம்பித்துறை 2 லட்சத்து 75 ஆயிரத்து 151 ஓட்டுகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். இதன்மூலம் ஜோதிமணி 4,20,546 ஓட்டுகள் வித்தியாசத்தில வெற்றி பெற்றார். தற்போது அவர் மீண்டும் போட்டியிட உள்ள நிலையில் அவர் வெல்வாரா? என்பது ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் ஜுன் 4ம் தேதி தெரிந்துவிடும்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.