முடிஞ்சு போன சனாதனப் பிரச்சனையை பற்றி திரும்ப திரும்ப ஏன் பேசறீங்க : செய்தியாளர் சந்திப்பில் அன்புமணி காட்டம்!!
சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து ஒன்று அவரை தேசியளவில் பிரபலம் அடைய வைத்துவிட்டது. ஆந்திராவில் தலித் இளைஞர்கள் சிலர் உதயநிதி ஸ்டாலின் படத்துக்கு பால் அபிஷேகம் செய்யும் அளவுக்கு அவர் தேசியளவில் கவனம் ஈர்த்துள்ளார். பிரதமர் மோடி உட்பட மத்திய அமைச்சர்கள் பலரும் உதயநிதியின் சனாதனம் குறித்த பேச்சுக்கு எதிர் வினையாற்றினர்.
ஒரே வாரத்தில் இந்தியா முழுவதும் உதயநிதி பேசப்பட்டார். இந்தச் சூழலில் அவர் பேசிய கருத்து பற்றி செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு கடுகடுத்த அன்புமணி, ”யப்பா, சனாதனத்தை விட்டால் பேசுவதற்கு வேறு எதுவுமே இல்லையா, நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் உள்ளன. காவிரியில் கர்நாடகா தண்ணீர் கொடுக்க மறுப்பு, பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு, மின் கட்டணம் உயர்வு, வேலைவாய்ப்பு இல்லாமல் தமிழ்நாட்டில் 1.5 கோடி பேர் உள்ளார்கள், இதைப்பற்றியெல்லாம் பேச வேண்டும்.”
‘அதை விட்டுவிட்டு முடிஞ்சு போன ஒன்றை திரும்ப திரும்ப பேசக்கூடாது, அடுத்தது என்னவோ அதை பேசணும், சனாதனம்.. சனாதனம்..ன்னு இன்னும் அதையே கேட்காதீர்கள்” என செய்தியாளர்களிடம் கூறினார் அன்புமணி.
அதேபோல் இந்தியா என்கிற பெயரை பாரத் என்று மாற்றப்படுவதாக சொல்கிறார்களே, அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என செய்தியாளர்கள் வினவினர். முதலில் அது குறித்த முடிவை மத்திய அரசு எடுக்கட்டும் அதன் பிறகு கருத்து தெரிவிக்கிறேன் எனக் கூறி அந்தக் கேள்விக்கு பதிலளிப்பதிலிருந்தும் நழுவிக்கொண்டார் அன்புமணி ராமதாஸ்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.