நெல்லை : பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி நீராவி முருகனை என்கவுண்ட்டர் செய்ய என்ன காரணம் என்பது குறித்து நெல்லை போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்த களக்காடு அருகே பதுங்கியிருந்த பிரபல ரவுடி நீராவி முருகனை, திண்டுக்கல்லில் தொடர்புடைய வழக்கு ஒன்றிற்காக கைது செய்த திண்டுக்கல் தனிப்படை போலீசார் விரைந்தனர். அப்போது, பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடி நீராவி முருகனை, போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்தனர்.
ரவுடி நீராவி முருகனை கைது செய்ய முயன்ற போது போலீசாரை தாக்கியதால், தற்காப்புக்காக என்கவுன்டர் செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த என்கவுன்ட்டர் சம்பவம் குறித்து நெல்லை மாவட்ட எஸ்பி சரவணன் கூறியதாவது :- நீராவி முருகன் மீது கடத்தல் உள்பட 80க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. வழக்கு ஒன்றுக்காக நீராவி முருகனை கைது செய்ய திண்டுக்கல் போலீசார் வந்துள்ளனர். அவனை கைது செய்ய பின்தொடர்ந்து சென்ற போது, காவல் ஆய்வாளர்கள் மீது அரிவாளால் தாக்கியுள்ளான். இதனால், தற்காப்புக்காக தங்களிடம் இருந்த கைத்துப்பாக்கியை வைத்து சுட்டுள்ளனர். இதில், அவன் இறந்துள்ளான். 4 போலீசாருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு முதலுதவி வழங்கப்பட்டுள்ளது.
நீராவி முருகன் மீது பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் உள்ளன. குறிப்பாக, கடுமையான ஆயுதங்களைக் காட்டி பெண்களிடம் வழிப்பறி செய்வான். பெண்களை தொல்லையும் செய்துள்ளான். ஒரு தவறு செய்தால், அதோடு நிறுத்திக் கொள்ள மாட்டான். தொடர்ந்து 4,5 குற்றங்களை செய்வான், எனக் கூறினார்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.