மத்திய பிரதேசம், உஜ்ஜைனில் காரில் கணவர் உடன் இருந்த கள்ளக்காதலியை மனைவி அடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் ஜிதேந்திரா மாலி – உஷா ஆர்யா என்ற தம்பதி வசித்து வருகின்றனர். இதில், கணவர் ஜிதேந்திர மாலிக்கு வேறு ஒரு பெண் உடன் தொடர்பு இருப்பதாக உஷா ஆர்யாவுக்கு தகவல் கிடைத்து உள்ளது. இது குறித்து கணவரிடம் கேட்டதற்கு மழுப்பலாக பதிலளித்து வந்து உள்ளார்.
எனவே, நேரம் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என உஷா ஆர்யா இருந்து உள்ளார். இந்த நிலையில் தான் ஜிதேந்திரா மாலி தனது பெண் தோழி உடன் காரில் உல்லாசமாகச் சுற்றிவிட்டு, உஜ்ஜைன் சாலையில் வலம் வந்து உள்ளார். அப்போது, அதனை மனைவி உஷா பார்த்து உள்ளார்.
பின்னர், உடனடியாக காரை நிறுத்திய உஷா, கதவைத் திறந்து, உள்ளே இருந்த பெண் தோழியான பூஜா என்ற பெண்ணை சரமாரியாத் தாக்கத் தொடங்கினார். இதனை அங்கு இருந்த ஒருவர் வீடியோ எடுத்து உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், பூஜாவின் முடியைப் பிடித்து இழுக்கும் உஷா, அவரது கன்னத்தில் மாறி மாறி அறைகிறார். தொடர்ந்து, அவரை காரில் இருந்து வெளியே இழுத்த உஷா, மீண்டும் மீண்டும் அவரை அறைகிறார். இதனை காரினுள் அமர்ந்தவாறே முகத்தை மறைத்துக் கொண்டு அவரது கணவர் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இதையும் படிங்க: மனைவியுடன் உடலுறவு கொள்வது குற்றமே.. மும்பை ஐகோர்ட் அதிரடி!
ஆனால், இத்தனை அமளிக்கு மத்தியிலும் பூஜா, ‘எனக்கு அவர் தான் வேண்டும். நாங்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம்’ எனக் கூறுகிறார். இதனையடுத்து அடி இன்னும் அதிகமாகிறது. இதனையடுத்து, ‘நீங்கள் யார்? எனக்கு யார் என்றே தெரியவில்லை’ என பூஜா கூற, ‘நான் அதனை காவல் நிலையத்தில் சொல்கிறேன்’ என சினிமாவில் வசனம் பேசுவது போல் உஷா கூறுவதுடன் வீடியோ முடிவடைகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.