சென்னையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெறும் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி நிர்வாகிகள் 2ம் நாள் நேர்காணல் நிகழ்ச்சியில் மின்சாரம், கலால் மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது:- இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் செஸ் போட்டிகளை நடத்தி தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு ஒரு எழுச்சி வந்துள்ளது.
ஆதாருடன் மின்சார அட்டையை இணைக்காதவர்கள் இந்த மாத இறுதிக்குள் இணைக்க வேண்டும். மின் துறையை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகின்றது. இந்த சட்ட மசோதாவை முதலமைச்சர் ஒரு போதும் ஏற்று கொள்ள மாட்டார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறப்போகிறோம் என பொறுத்திருந்து பாருங்கள். மக்கள் முதல்-அமைச்சர் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள்.
ஏப்ரல் மாதம் வாட்சுக்கான பில் தருகிறேன் என கூறினார் கையில் பில் இருந்தால் கொடுக்க வேண்டியது தானே.இல்லையென்றால் வெகுமதியால் வந்தது, அன்பளிப்பு கொடுத்தார்கள் என ஒப்புக்கொள்ள வேண்டியது தானே என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இதையும்…
புரட்சி இயக்குனர் “பரியேறும் பெருமாள்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் மாரி செல்வராஜ். தனது…
கீழடி தமிழர் தாய்மடி எனும் தலைப்பில் திமுக மாணவர் அணி சார்பாக மதுரை விரகனூர் சுற்றுச்சாலை அருகே மத்திய அரசைக்…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது”…
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சிவானந்தா காலனிக்கு செல்லும் தனியார் பேருந்து ஒன்று இன்று காலை 8 மணிக்கு…
This website uses cookies.