வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக அரசுக்கு நிதி கிடைக்குமா? சிக்னல் கொடுத்த மேலிடம்.. டிஆர் பாலுவுக்கு சொன்ன மெசேஜ்!!
கடந்த டிசம்பர் மாதம் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக்ஜம் புயல் காரணமாக கனமழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து, டிசம்பர் மாதம் 17 மற்றும் 18-ம் தேதி தூத்துக்குடி, நெல்லை,தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்பட்டது.
இந்நிலையில், மிக்ஜம் புயல் மற்றும் தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கான நிவாரண தொகையாக 19,692.67 கோடியும், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரண தொகையாக 18,214.52 கோடி என மொத்தம் ரூ 37,907 கோடி தமிழ்நாடு அரசு சார்பில் கோரியுள்ளது.
ஆனால் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இன்னும் நிதி ஒதுக்கப்படாததால் வெள்ள நிவாரண தொகையை உடனடியாக வழங்கக்கோரி இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக எம்.பி.க்கள் குழு சந்தித்தனர்.
அதன்படி, திமுகவின் மக்களவை குழு தலைவர் டி.ஆர் பாலு தலைமையில் ஜெயக்குமார், வைகோ, சிபிஐ சுப்பராயன், சிபிஎம் நடராஜன், விசிக ரவிக்குமார், முஸ்லிம் லீக் நவாஸ்கனி, கொமதேக சின்ராஜ் ஆகிய 8 எம்.பிக்கள் சந்திப்பில் இடம் பெற்றனர்.
டெல்லியில் உள்துறை அமித்ஷாவை சந்தித்த பின் திமுக எம்.பி டி.ஆர் பாலு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது” மிக்ஜம் புயல் , தென் மாவட்ட பாதிப்புக்கு தமிழக அரசு கோரிய ரூ.37,000 கோடியை உடனடியாக விடுவிக்க கோரிக்கை வைத்துள்ளோம். வெள்ளம் சேதம் குறித்து எடுத்துரைத்தோம் என கூறினார்.
மேலும், ஜனவரி 15-ஆம் தேதி அன்று டெல்லி திரும்பும் மத்திய அரசின் குழு தரும் அறிக்கை அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் எனவும் மத்திய அரசு தமிழ்நாட்டைப் புறக்கணிக்கவில்லை, மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது என்பதை உணர்ந்துள்ளோம். நிதி வழங்குவது குறித்து 27-ஆம் தேதிக்குள் அறிவிப்பு வெளியாகும் என அமித்ஷா கூறியதாக டி.ஆர் பாலு தெரிவித்தா
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.