சென்னை ; விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் நடந்தக் கூட்டத்தின் மேடையில், பெண் நிர்வாகி பேசியதை கேட்டு, திருமாவளவன் அதிர்ச்சியடைந்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில், அக்கட்சியின் நிர்வாகி நற்சோனை தலைமையில், திருமாவளவன் மணி விழாவுக்கான தங்கம் வழங்கும் நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில் உள்ள சர்.பி.டி. தியாகராய அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டார்.
திருமாவளவன் உள்பட பல முக்கிய நிர்வாகிகள் மேடையில் அமர்ந்திருந்த போது பேசிய மகளிர் விடுதலை இயக்கத்தின் மாநில செயலாளர் நற்சோனை, திருமாவளவன் பெயரை சொல்லி நன்கொடைகள் வாங்கப்படுவதாக குற்றஞ்சாட்டினார்.
மேலும், மாவட்ட ஆண் நிர்வாகிகள் பெண்களை மிக கேவலமாக திட்டுவதாகவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள்ளேயே சனாதனம் மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை இருப்பதாக பகிரங்கமாக சாடினார். மேடைக்கு மேடை சனாதான எதிர்ப்பு பேசி வரும் திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள்ளே சனாதானம் இருப்பதாக அக்கட்சியின் மகளிர் அணி செயலாளர் நற்சோனை பேசியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனே, நற்சோலை பேசிக்கொண்டிருந்தபோது மேடைக்கு வந்த ஆண் நிர்வாகி ஒருவர், மைக்கை ஆப் செய்து விட்டார். அப்போது நற்சோனைக்கு ஆதரவாக அரங்கில் அமர்ந்திருந்த மகளிர் பலர் எழுந்து நின்று குரல் கொடுத்ததால் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.