சென்னை ; விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் நடந்தக் கூட்டத்தின் மேடையில், பெண் நிர்வாகி பேசியதை கேட்டு, திருமாவளவன் அதிர்ச்சியடைந்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில், அக்கட்சியின் நிர்வாகி நற்சோனை தலைமையில், திருமாவளவன் மணி விழாவுக்கான தங்கம் வழங்கும் நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில் உள்ள சர்.பி.டி. தியாகராய அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டார்.
திருமாவளவன் உள்பட பல முக்கிய நிர்வாகிகள் மேடையில் அமர்ந்திருந்த போது பேசிய மகளிர் விடுதலை இயக்கத்தின் மாநில செயலாளர் நற்சோனை, திருமாவளவன் பெயரை சொல்லி நன்கொடைகள் வாங்கப்படுவதாக குற்றஞ்சாட்டினார்.
மேலும், மாவட்ட ஆண் நிர்வாகிகள் பெண்களை மிக கேவலமாக திட்டுவதாகவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள்ளேயே சனாதனம் மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை இருப்பதாக பகிரங்கமாக சாடினார். மேடைக்கு மேடை சனாதான எதிர்ப்பு பேசி வரும் திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள்ளே சனாதானம் இருப்பதாக அக்கட்சியின் மகளிர் அணி செயலாளர் நற்சோனை பேசியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனே, நற்சோலை பேசிக்கொண்டிருந்தபோது மேடைக்கு வந்த ஆண் நிர்வாகி ஒருவர், மைக்கை ஆப் செய்து விட்டார். அப்போது நற்சோனைக்கு ஆதரவாக அரங்கில் அமர்ந்திருந்த மகளிர் பலர் எழுந்து நின்று குரல் கொடுத்ததால் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.