சென்னையில் திமுக போராட்டத்தின் போது, அவ்வழியாக பைக்கில் வந்த பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெசன்நகர் 179வது வார்டுக்குட்பட்ட வார்டில் வாக்கு இயந்திரத்தை சேதப்படுத்தியதாக திமுக வேட்பாளரின் கணவரை போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த பெண்கள், சாலையோரமாக போராட்டக்காரர்களை கடந்து செல்ல முயன்றனர்.
அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவைச் சேர்ந்த ஒருசிலர், அந்தப் பெண்களின் வாகனத்தை இழுத்து தள்ளி வம்புக்கு இழுத்தனர். இதனால், ஆத்திரமடைந்த அந்தப் பெண்களும் பைக்கில் இருந்து இறங்கிச் சென்று பதிலுக்கு எதிர்ப்பு குரல் கொடுத்தனர். இதனால், அங்கு சிறிது சலசலப்பு ஏற்பட்டது. பின்னர், அங்கிருந்த சிலர் பெண்களை பத்திரமாக அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, திமுக போராட்டத்தின் போது பெண்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.