சென்னையில் திமுக போராட்டத்தின் போது, அவ்வழியாக பைக்கில் வந்த பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெசன்நகர் 179வது வார்டுக்குட்பட்ட வார்டில் வாக்கு இயந்திரத்தை சேதப்படுத்தியதாக திமுக வேட்பாளரின் கணவரை போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த பெண்கள், சாலையோரமாக போராட்டக்காரர்களை கடந்து செல்ல முயன்றனர்.
அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவைச் சேர்ந்த ஒருசிலர், அந்தப் பெண்களின் வாகனத்தை இழுத்து தள்ளி வம்புக்கு இழுத்தனர். இதனால், ஆத்திரமடைந்த அந்தப் பெண்களும் பைக்கில் இருந்து இறங்கிச் சென்று பதிலுக்கு எதிர்ப்பு குரல் கொடுத்தனர். இதனால், அங்கு சிறிது சலசலப்பு ஏற்பட்டது. பின்னர், அங்கிருந்த சிலர் பெண்களை பத்திரமாக அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, திமுக போராட்டத்தின் போது பெண்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பல வருடக் கனவு கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் பணிகள் தொடங்கப்பட்டது. தென்னிந்திய…
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
This website uses cookies.