சென்னை – ராயபுரத்தில் உள்ள ஆராய்ச்சி மாணவர் விடுதியில் வழங்கப்பட்ட உணவில் புழு இருப்பதாக இயக்குநர் பா.ரஞ்சித் நடத்தி வரும் நீலம் பண்பாட்டு மையம் புகார் அளித்துள்ளது.
இது தொடர்பாக நீலம் பண்பாட்டு மையம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- தமிழகம் முழுவதும் உள்ள கிராமப்புற எழை எளிய மாணவர்கள் விடுதியில் தங்கி பயின்று வருகிறார்கள். ஆனால், மாணவர்களின் நலன்களில் எந்தவொரு அக்கறை இல்லாமல் இருக்கும் ஆதிதிராவிடர்/பழங்குடியினர் விடுதிகள் அரசாங்கத்தால் ஏற்படக்கூடிய நிதி ஒழுங்காக பயன்படுத்துவதும் கிடையாது.
அதே போல் தரமான உணவும் கொடுப்பதில்லை,தொடர்ந்து உணவில் புழு,கல் ஒரு சில நேரங்களில் வேகாத சோற்றை போடுகிறார்கள். இதனால் மாணவர்கள் உடல் நோயால் பாதிக்கப்படுகிறார்கள். விடுதி காப்பாளர் மற்றும் சமையலரிடம் சொல்லியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ஒரு சிலநாள் தவறுவது சரி. ஆனால், தினமும் இதே நிலையிலிருந்தால் என்ன செய்வது, ஆராய்ச்சி மாணவர் விடுதியியே இந்த நிலை இருந்தால்,தமிழகம் முழுவதும் உள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதியின் நிலை பெரும் அவலம் தான்..
விடுதியில் பல்வேறு அடிப்படை பிரச்சனைகள் உள்ளது. அனைத்து விடுதிகளையும் சீர்படுத்த அரசு உடனடியாக சிறப்பு ஆய்வுக்குழு அமைக்க வேண்டும். மாணவர்களின் சிந்தனைக்கு வழிவகுக்கும் வகையில் அவர்களின் நலனிற்கு துணை நிற்பது தமிழக அரசின் தலையாயக் கடமை ஆகும், என தெரிவித்துள்ளது.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.