நீங்க என்னோட சொத்து.. அண்ணாமலைக்கு உருக்கமாக கடிதம் எழுதிய பிரதமர் மோடி!!!
தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். அந்த வகையில் தமிழக பா.ஜ.க. தலைவரும், கோவை தொகுதி பா.ஜ.க. வேட்பாளருமான அண்ணாமலைக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமர் மோடி எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது;- எனது சக காரியகர்த்தா அண்ணாமலைக்கு ராம நவமி திருநாளில் கடிதம் எழுதுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் நலமுடன் இருப்பதாக நம்புகிறேன். ஒரு மதிப்புமிக்க வேலையை விட்டுவிட்டு மக்களுக்கு நேரடியாக சேவை செய்வதற்கு வந்துள்ள உங்கள் முடிவை நான் வாழ்த்துகிறேன்.
தமிழகம் முழுவதும் பா.ஜ.க.வின் அடிமட்ட இருப்பை வலுப்படுத்தவும், சட்ட அமலாக்கம், நிர்வாகம் மற்றும் இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் உள்ளிட்ட முக்கியமான பிரச்சினைகளை முன்னிறுத்துவதிலும் நீங்கள் உண்மையிலேயே முக்கிய பங்காற்றியுள்ளீர்கள்.
உங்களது உறுதியான தலைமையால் கோவைக்கு மகத்தான பலன் கிடைக்கும். மக்களின் ஆசீர்வாதத்துடன் நீங்கள் நாடாளுமன்றத்தை அடைவீர்கள் என்று நான் நம்புகிறேன்.
உங்களைப் போன்ற குழு உறுப்பினர்கள் எனக்கு பெரும் சொத்து. நாம் ஒரே அணியாக, தொகுதி மக்களின் நலனுக்காகவும், நாட்டின் நலனுக்காகவும் பாடுபடுவோம்.
இந்தக் கடிதத்தின் மூலம் உங்கள் தொகுதி மக்களுக்கு இது சாதாரண தேர்தல் அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா முழுவதும் உள்ள குடும்பங்கள், குறிப்பாக மூத்த குடிமக்கள், காங்கிரஸ் ஆட்சியில் தாங்கள் அனுபவித்த சிரமங்களை நினைவில் கொள்வார்கள். கடந்த 10 ஆண்டுகளில், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரின் வாழ்க்கைத் தரமும் மேம்பட்டுள்ளது. பல பிரச்சினைகள் நீக்கப்பட்டுள்ளன. இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது. அனைவருக்கும் சிறந்த வாழ்க்கையை உறுதி செய்வதற்கான எங்கள் பணியில் இந்தத் தேர்தல் முக்கியமானதாக இருக்கும். நமது நிகழ்காலத்தை ஒளிமயமான எதிர்காலத்துடன் இணைக்க இந்தத் தேர்தல் ஒரு வாய்ப்பு.
தற்போது வெயிலின் தாக்கல் அதிகமாக இருக்கிறது என்பதை நான் அறிவேன். இருப்பினும் இந்த தேர்தல் நமது நாட்டின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானது. எனவே, அதிகாலை நேரத்திலேயே மக்கள் தங்கள் வாக்குகளை செலுத்திவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் படிக்க: விஸ்வரூபம் எடுக்கும் நிர்மலா தேவி வழக்கு? புகார்களை விசாகா கமிட்டிக்கு அனுப்பாதது ஏன்? நீதிமன்றம் கிடுக்குப்பிடி!
நாட்டு மக்களின் நலனுக்காகவே எனது நேரம் அனைத்தையும் செலவிடுகிறேன். தேர்தலில் வெற்றி பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.