நிறைவேற்றிய கோரிக்கைகளை மீண்டும் முன்வைக்கறாங்க.. தயவுசெய்து இடைஞ்சல் பண்ணாதீங்க : அமைச்சர் சிவசங்கர் கோரிக்கை!

நிறைவேற்றிய கோரிக்கைகளை மீண்டும் முன்வைக்கறாங்க.. தயவுசெய்து இடைஞ்சல் பண்ணாதீங்க : அமைச்சர் சிவசங்கர் கோரிக்கை!

போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், பேருந்து சேவை இன்று காலை முதல் வழக்கமாகவே இருக்கிறது. எங்காவது ஓரிரு இடங்களில் பேருந்து சேவை குறைவாக இருப்பதாகப் புகார் வந்தால் அங்கும் பஸ் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் எந்தவொரு சிரமத்தையும் எதிர்கொள்ளாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இன்று காலை முதல் நான் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் தொடர்பு கொண்டு பேசி வருகிறேன். அனைத்து இடங்களிலும் பேருந்துகள் சேவை வழக்கமாகவே இருக்கிறது. எல்லா பணிமனைகளில் இருந்தும் பேருந்துகள் வெளியே வந்துவிட்டன. அனைத்து இடங்களிலும் பஸ்கள் வழக்கம் போலவே இயங்கி வருகிறது. எங்கேயும் எந்தவொரு பிரச்சினையும் இல்லை

அவர்கள் (தொழிற்சங்கத்தினர்) தான் பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டு, நேற்றைய தினமே போராட்டத்தைத் தொடங்கிவிட்டனர். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் காத்திருந்தோம். இரண்டு கோரிக்கைகளில் செய்து தர உறுதி அளித்திருந்தோம். மற்ற விஷயங்களில் வேலை நடந்து வருகிறது. காலியிடங்களை நிரப்ப டிரைவர், ஓட்டுநர்களை எடுக்கும் பணிகளைத் தொடங்கிவிட்டோம். இதை அவர்களே அறிவார்கள்.

ஆனால், அரசியலுக்காக இல்லை என்கிறார்கள். அதேபோல பணிக் காலத்தில் ஓட்டுநர், டிரைவர் உயிரிழந்தால் அவர்களுக்குப் பணி வழங்குவதும் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் நடக்கவில்லை. திமுக ஆட்சி அமைத்த பிறகே வாரிசுகளுக்குக் கருணை அடிப்படையில் வேலை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், இந்த விவகாரங்களில் திட்டமிட்டு தவறான தகவல்களை அவர்கள் அளிக்கிறார்கள். போராட்டத்திற்கு வலுசேர்க்க வேண்டும் என்பதற்காக இப்படி உண்மைக்கு மாறான தகவல்களைச் சொல்கிறார்கள். அவர்கள் வலியுறுத்துவது ஒரே ஒரு கோரிக்கைதான். மற்றபடி எண்ணிக்கைக்காகவே ஆறு கோரிக்கை என்கிறார்கள்.

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை என்பது ஒவ்வொரு ஆண்டும் நடப்பதுதான். இதற்குத் தொடக்க நடவடிக்கையாக அதிகாரிகளைக் கொண்ட குழு அமைக்கும் பணியைத் தொடங்கியுள்ளோம். இந்த பணி முடிந்த பிறகு ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை அறிவிப்பு வெளியாகும். நான் இப்போது சென்னையில் இருந்தபடி தமிழகம் முழுக்க இயக்கப்படும் பேருந்து சேவையைக் கண்காணித்து வருகிறேன்.

எங்காவது பேருந்து சேவைகள் குறைவாக இருந்தால் அதிகாரிகள் உரிய ஆய்வை நடத்துவார்கள். நான் விடியற்காலை முதலே பல இடங்களில் பேசி வருகிறேன். எங்கும் பஸ் சேவையில் பாதிப்பு இல்லை. மழை பெய்யும் சில மாவட்டங்களில் மட்டும் ஊழியர்கள் வரத் தாமதமாவதால் பஸ் குறைவாக இயக்கப்படுகிறது. அதைத் தவிர வேறு எங்கும் பிரச்சினை இல்லை” என்றார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அந்த நபர் அப்படி பண்ணது… அதிர்ச்சியாகிட்டேன்- ஜொனிடா காந்திக்கு நடந்த பாலியல் சீண்டல்? அடக்கொடுமையே

மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…

38 minutes ago

80 வயது மூதாட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை… சம்பவத்திற்கு பின் கும்பல் செய்த கொடூர சம்பவம்!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள…

55 minutes ago

அண்ணாமலை, சீமான் ஓட்டு கேட்டு வந்தால் செ**பை கொண்டு அடிங்க.. சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் சர்ச்சை!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பஜார் வீதியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மற்றும் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில்…

1 hour ago

ஒரு வழியா கட்டிடத்தை நிமித்திட்டாங்கப்பா- தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்ட வீடியோ! விஷால் ஹேப்பி அண்ணாச்சி…

பல வருடக் கனவு கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் பணிகள் தொடங்கப்பட்டது. தென்னிந்திய…

2 hours ago

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

18 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

18 hours ago

This website uses cookies.