சென்னையில் ஜிம்மில் கடுமையான உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த இளம்பெண் மருத்துவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த இளம்பெண் மருத்துவர் அன்விதா (24), தனியார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். இவர் நியூ ஆவடி சாலையில் உள்ள தனியார் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது வழக்கம். நேற்று இரவு 7 மணியளவில் அன்விதா ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார்.
இதனைக் கண்டு அங்கிருந்தவர்கள் திடுக்கிட்டு போகினர். அப்போது, அதே உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த மருத்துவர் ஒருவர், முதலுதவி கொடுத்து, அன்விதாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தபோது அன்விதா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, உயிரிழந்த இளம்பெண் மருத்துவரின் உடலை பெற்றுக் கொண்ட குடும்பத்தினர், இறுதிச் சடங்கு செய்து உடலை நல்லடக்கம் செய்துள்ளனர். இதனிடையே, உடற்பயிற்சி கூடத்தில் உள்ள சிசிடிவி காட்சிப் பதிவுகளை கைப்பற்றி கீழ்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.