வேடிக்கை பார்க்க போனவருக்கு நேர்ந்த கதி: வம்பிழுத்துக் கொன்ற குடிமகன்கள்: திருச்சியில் பயங்கரம்..!!

புதுக்கோட்டை மாவட்டம் விராலி மலையை சேர்ந்தவர் ரஞ்சித் கண்ணன்(18).இவர் திருச்சியில் உள்ள தந்தை பெரியார் அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று கல்லூரி முடித்துவிட்டு ஸ்ரீரங்கம் மாம்பழ சாலையில் உள்ள அவருடைய மாமா வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு இருந்த அவரின் மாமா மகன் சந்தோஷ் என்பவருடன் சேர்ந்து காவிரி ஆற்றில் அதிக நீர் வருவதால் அதனை ரசிப்பதற்காக கீதாபுரம் பகுதிக்கு சென்றுள்ளார்.

ரஞ்சித் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரும் கீதாபுரம் பகுதியில் காவிரி கரையோரம் நடந்து சென்று கொண்டிருந்த போது அப்பகுதியில் மது அறிந்து கொண்டிருந்த ஐந்து பேர் ரஞ்சித் மற்றும் சந்தோஷ் இருவரையும் நீங்கள் யார் ? எதற்காக இங்கு வந்துள்ளீர்கள்? என கேட்டுள்ளனர் அப்பொழுது ஏற்பட்ட தகராறில் அவர்கள் அனைவரும் சேர்ந்து ரஞ்சித் கண்ணனை தாக்கியுள்ளனர்.

இதில் காயமடைந்த ரஞ்சித் கண்ணனை சந்தோஷ் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பொழுது ரஞ்சித்துக்கு மயக்கம் வந்துள்ளது. உடனடியாக அவர் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் ரஞ்சித்தை அனுமதித்தார்
அதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரஞ்சித் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது குறித்து வழக்கு பதிவு செய்து நவீன் குமார் (23), விஜய் (23) மற்றும் 17 வயதான 2 பள்ளி மாணவர்கள் என நான்கு பேரை கைது செய்துள்ளனர் மேலும் இந்த வழக்கு தொடர்பாக சரித்திர பதிவேடு குற்றவாளியான சுரேஷ் என்கிற சுளிக்கி சுரேஷ் (26) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

எதற்காக ரஞ்சித்தை அவர்கள் 5 பேரும் தாக்கினார்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Sudha

Share
Published by
Sudha

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

1 day ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

1 day ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

1 day ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

1 day ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

1 day ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

1 day ago

This website uses cookies.