விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவைச் சேர்ந்தவர் அற்புதராஜ், வயது 33 ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகவில்லை.
கடந்த 2016ம் ஆண்டு, திருச்சி சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்குச் சென்றவர், அங்கு மதுபாட்டில்களை திருடியதாகவும், விற்பனையாளர் உள்ளிட்டோரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. விழுப்புரம் மேற்கு போலீசார் அற்புதராஜ் மீது வழக்கு தொடர்ந்தனர்.
விசாரணைக்கு, விழுப்புரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து இவர் ஆஜராகாமல் இருந்து வந்ததால், அவருக்கு கடந்த மே மாதம் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
அதன்பேரில் அற்புதராஜை நேற்று முன்தினம் விழுப்புரம் மேற்கு போலீசார் கைது செய்து, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியபின், மாஜிஸ்திரேட் கோர்ட்டடில் ஆஜர்படுத்தி, விழுப்புரம் கிளைச் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் நேற்று காலை 6:00 மணிக்கு, சிறையில் இருந்த பிற விசாரணை கைதிகள் எழுந்த நிலையில், அற்புதராஜ் எழுந்திருக்கவில்லை. சிறை காவலர்கள் சென்று பார்த்தபோது, அவர் மயங்கி நிலையில் இருந்தார். உடன் அவரை விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தனர்.
கிளைச் சிறை கண்காணிப்பாளர் நைனார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.இது குறித்து போலீசார் கூறுகையில், ‘பிரேத பரிசோதனை முடிவுக்குப் பிறகே அவர் இறந்ததற்கான முழு விபரமும் தெரியவரும்’ என்றனர்.
அற்புதராஜின் உறவினர்கள் கூறுகையில், ‘போலீசார் தாக்கியதால் இறந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.