சென்னையில் போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்ற இளைஞர் உயிரிழந்த விவகாரம்: தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்…உண்மை வெளியாகுமா?

சென்னை: போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்ற இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக தேசிய மனித ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பட்டினப்பாக்கைத்தை சேர்ந்தவர் விக்னேஷ், இவர் மெரினா கடற்கரையில் குதிரையை சவாரிக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இவரது நண்பரான திருவல்லிக்கேணியை சேர்ந்த சுரேஷ் என்பவர் பெயிண்ட் அடிக்கும் தொழில் செய்து வருகிறார்.

இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் புரசைவாக்கம், கெல்லீஸ் சிக்னல் பகுதியில் ஆட்டோவில் சென்றுள்ளனர். அப்போது அங்கு சென்னை தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, அந்த வழியாக ஆட்டோவில் வந்த இளைஞர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்து போலீசார் விசாரித்துள்ளனர். அந்த சமயம், போலீசார் கேள்விக்கு முன்னுக்கு பின் முரணமாக பதிலளித்ததாகவும், மேலும், போலீசாரை தாக்கி விட்டு தப்பித்து ஓடவும் முயற்சித்ததாகவும், அவர்களிடம் கத்தியும், கஞ்சா பொட்டலமும் இருந்ததாக போலீஸ் தரப்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

இதையடுத்து, பிடிபட்ட இருவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்ததாகவும், அங்கு விக்னேஷுக்கு வலிப்பு ஏற்பட்டு, திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வலியில் அவர் உயிரிழந்ததாகவும் போலீசார் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த தகவல் குறித்து பிரபல பத்திரிகைகளும், ஊடகங்களும் எந்த செய்தியும் வெளியிடாத நிலையில், யூடியூப் சேனல்கள் மூலம் தகவலை அறிந்த விக்னேஷ் உறவினர்கள், மருத்துவமனைக்கு வந்தனர். ஆனால் விக்னேஷின் உடலை பார்க்க அவர்களுக்கு காவல்துறை அனுமதிக்காதால், விக்னேஷ் உடலை வாங்க அவரது உறவினர்கள் மருத்துவமனையில் காத்திருந்தனர்.

இந்நிலையில், விக்னேஷின் உடலை தாங்களே இறுதிசடங்கு செய்து அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் விக்னேஷின் உடலை அவரது சகோதரர் வினோத்குமார் பார்த்தாகவும், முகம் மற்றும் உடலில் காயங்கள் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், விக்னேஷ் மரணம் குறித்து மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், விக்னேஷின் மரணம் இயற்கை மரணம் அல்ல, இது சாத்தான்குளம் தந்தை, மகன் வழக்கு போல போலீசாரால் நிகழ்த்தப்பட்ட மரணம் என கூறிய வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சென்னையில் விக்னேஷ் என்ற வாலிபர் காவல்நிலையத்தில் மரணித்தது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஏ சங்கர், டெல்லியை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் அமல் காந்தி சக்மா ஆக இருவரும் இணையதளத்தின் வாயிலாக புகார் அளித்துள்ளதாக ட்விட்டரில் தகவல் வெளியாகியுள்ளது.

UpdateNews360 Rajesh

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

6 hours ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

7 hours ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

8 hours ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

9 hours ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

9 hours ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

10 hours ago

This website uses cookies.