16 வயது மாணவியை திருமணம் செய்து, அவருடன் நெருக்கமாக இருந்த சீக்ரெட் வீடியோவை வைத்து, மாணவியின் தாயை மிரட்டி உல்லாசத்துக்கு அழைத்த இன்ஸ்டாகிராம் காதலனை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி அதே பகுதியில் உள்ள 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு வேலூர் மாவட்டம் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அரசு பேருந்து ஊழியர் மார்க்கபந்து, முன்னாள் கவுன்சிலர் உமா மகேஸ்வரியின் மகன் கோகுல் (20) என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
கோகுல் வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் இறுதியாண்டு படித்து வருகிறார். இவர்கள் இருவரின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் போனில் பேசி வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 5ம் தேதி கோகுல், தனது பெற்றோர் தனக்கு திருமணம் செய்து வைக்க வேறு இடத்தில் பெண் பார்த்து ஏற்பாடு செய்திருப்பதாக மாணவியிடம் போன் மூலம் கூறியுள்ளான். மேலும் தான் திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் அறை எடுத்து தங்கி இருப்பதாகவும், தன்னை வந்து சந்திக்கும்படி மாணவியிடம் கூறி உள்ளான்.
அதன் அடிப்படையில் ஜனவரி 6ஆம் தேதி அந்த மாணவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் காதலனைத் தேடி அவன் தங்கிருந்த அறைக்கு சென்றுள்ளார். அப்போது கோகுல் தான் வைத்திருந்த தாலியை கழுத்தில் கட்டி உள்ளான். இதனைத் தொடர்ந்து கோகுல் ஆசை வார்த்தை கூறி மாணவியுடன் உல்லாசமாக இருந்துள்ளான்.
இருவரும் உல்லாசமாக இருந்ததை கோகுல் தனது செல்போனில் வீடியோ மற்றும் போட்டோ எடுத்து வைத்திருந்தான். இந்நிலையில் கோகுலுடனான காதல் விவகாரம், மாணவியின் தாய்க்கு தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மாணவியின் தாய் இருவரையும் கண்டித்துள்ளார். ஆனால் கோகுல் மாணவியின் தாயிடம் லாவகமாக பேசி தொடர்ந்து மாணவியிடம் பழகி வந்துள்ளான்.
இந்த நிலையில், திடீரென மாணவியின் தாய்க்கு கோகுல் போன் செய்து தனக்கு உடனடியாக 10,000 ரூபாய் பணம் வேண்டும் என்றும், தரவில்லை என்றால் மாணவியுடன் நெருக்கமாக இருக்கக்கூடிய போட்டோ மற்றும் வீடியோக்களை இணையத்தில் பரப்பி விடுவேன் என்று மிரட்டியுள்ளான். மேலும் பணம் தராவிட்டாலும் பரவாயில்லை, தன்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டும் என்று மாணவியின் தாயிடம் கோகுல் போனில் மிரட்டியுள்ளான்.
தன்னுடைய தாய் வயதில் உள்ள மாணவியின் தாயை உல்லாசத்திற்கு அழைத்த கோகுலின் செயலால் அதிர்ச்சி அடைந்தார் மாணவி தாய். இதனால் செய்வதறியாது தவித்த மாணவியின் தாய் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீசார் கோகுல் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
படிக்கும் வயதில் இணையத்தில் முழ்கி தவறான சேர்க்கை வைத்தால், வாழ்க்கையை தொலைத்து நிற்பதுடன், தங்களுடைய குடும்பத்திற்கும் களங்கமும், அவமானமும் ஏற்படுத்தும் என்பதற்கு இந்த சம்பவமும் ஓர் எடுத்துகாட்டு.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.